Thursday, January 10, 2019

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe




தேவையான பொருட்கள்: 


பாசிப்பருப்பு - அரை கப்
துவரம் பருப்பு - அரைகப்
நறுக்கிய வெங்காயம் - 1
 நறுக்கிய தக்காளி - 2 

 பச்சை மிளகாய் - 4 
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
சாம்பார் தூள் - 11/2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணெய்  - 2  ஸ்பூன் 
கடுகு - அரை ஸ்பூன் 
 சீரகம் - அரை ஸ்பூன்
வெந்தயம்  - அரை ஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை: 

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,


வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.


தேவையான அளவு தண்ணீர்  விட்டு  2 பருப்புகளையும்  சேர்க்கவும்



 அதனுடன்  மஞ்சள்தூள்  



சாம்பார்  தூள்  



பெருங்காயத் தூள்   



தேவைாயன அளவு  உப்பு  சேர்த்து, 



குக்கரை மூடி 3  விசில் விட்டு, இறக்கவும். 



பின்பு  தேவையான அளவு உப்பு சேர்த்து சாம்பார் ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 



பின்  சிறு கடாயை அடுப்பில்  வைத்து, அதில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும்,  கடுகு வெந்தயம் சீரகம்  கருவேப்பிலை  மல்லி இலை சேர்த்துசேர்த்து தாளித்து, 



சாம்பாருடன் சேர்த்தால், டிபன் சாம்பார் ரெடி

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !