Showing posts with label பழ மொழிகள். Show all posts
Showing posts with label பழ மொழிகள். Show all posts

Tuesday, January 1, 2019

பழ மொழிகள் - 1

பழ மொழிகள்

பழ மொழிகள் - 1


1. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.
2. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
3. தன்னை போல் பிறரை நினை.
4. அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது.
5. இறந்த காலத்தை என்றும் பெற இயலாது.


6. காலம் பொன் போன்றது.
7. உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.
8. நிறைகுடம் ததும்பாது, குறைகுடம் கூத்தாடும்.
9. எலி வலையானாலும், தனி வலை ஆகாது.
10. இறைக்கிற ஊற்றே சுரக்கும்.


11. எறும்பு ஊர கல்லும் தேயும்.
12. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
13. ஐந்தில் விளையாதது, ஐம்பதில் வளையாது.
14. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்.
15. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்.


16. கரும்பு தின்ன கூலிவேண்டுமா?
17. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
18. யானைக்கும் அடி சறுக்கும்.
19. ஆற்றில் போட்டாலும் அளந்துபோட வேண்டும்.
20. கெடுவான் கேடு நினைப்பான்.


21. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
22. தோல்வியே வெற்றியின் முதல் படி.
23. பட்டகாலிலே படும். கெட்ட குடியே கெடும்.
24. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
25. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு.


26. பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
27. ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
28. பதறாத காரியம் சிதறாது.
29. குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு.
30. பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.


31. நெருப்பு இல்லாமல் புகையுமா?
32. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
33. சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது.
34. பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்.
35. நூலை போல சேலை, தாயை போல பிள்ளை.


36. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
37. எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்.



குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !