Saturday, January 12, 2019

கோயம்பேடு ஸ்பெஷல்

காய்கறிகளை விரும்பி உண்ணக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு..வளர்ந்தவர்களின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும்போது குழந்தைகளின் எண்ணிக்கையைக் கேட்கவும் வேண்டுமா? உண்மையில் குழந்தைகளுக்கு காய்கள் பிடிக்காமல் போவதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறதாம். குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் வாயில் கிட்டத்தட்ட 10,000 சுவை மொட்டுகள்/அரும்புகளுடன்(Taste buds) இருக்கின்றன. வயது கூடும்போது இந்த எண்ணிக்கை குறைந்து ஐந்தாயிரத்தில் வந்து நிற்கிறது.
Colorful vegetables and fruits
டேஸ்ட் பட்ஸ் அதிகமாக இருக்கும்போது காய்களில் இருக்கும் கொஞ்சூண்டு கசப்புத்தன்மை கூட அதிகமாகத்தெரியுமாம். அதனால் தான் குழந்தைகள் காய்களைப் பார்த்தால் தெறித்து ஒடுகின்றனர். பெரியவர்களான பின் இந்தக்கொஞ்சூண்டு கசப்பை உணரும் டேஸ்ட் பட்ஸ் அழிந்துவிடுவதால், காய்களின் சுவையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மக்கள் வந்துவிடுகின்றனர். ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், நான்-வெஜ்ஜை விரும்பி உண்ணும் இளைஞர்களுக்குக் காய்களின் சுவை 40 வயதிற்குப் பிறகுதான் தெரிகிறது..அதுவும் டாக்டர்களின் சிலபல அறிவுரை செஷன்களால்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !