Thursday, January 10, 2019

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar


தேவையானவை: 

 துவரம்பருப்பு - 100 கிராம்
பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்
 புளி -  சிறிதளவு 
சாம்பார் தூள் - 3 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் -  அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன் 
பெருங்காயத்தூள் - சிறிதளவு
 எண்ணெய் - 4 ஸ்பூன்
  உப்பு - தேவையான அளவு



செய்முறை: 

துவரம்பருப்பை   குக்கரில்   4 விசில்  விட்டு  வேகவத்து கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை தட்டிப் போட்டு வதக்கவும். 

புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து  தேவையான அளவு  உப்பு  மற்றும்  சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு   கடுகு, வெந்தயம்,சீரகம்  பெருங்காயத்தூளையும் போட்டு  தாளித்து சாம்பாரில் சேர்த்தால் சுவையான சுண்டைக்காய் சாம்பார் ரெடி.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !