Monday, January 7, 2019

நில்! கவனி! செல்!

முதன் முதலில் இங்கிலாந்து ரயில்வே கம்பெனிகள் தான் சிக்னலுக்காக வண்ண விளக்குகளை உபயோகப்படுத்தத் துவங்கினர். 1830 ஆம் ஆண்டு முதல்  புகைவண்டிகளை இயக்குபவர்களுக்கு எப்போது ரயிலை நிறுத்த/இயக்க வேண்டும் என்று சொல்வதற்காக இந்த முறை ரயில்வே நிர்வாகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்று முதல் இன்று வரை, அபாயத்தைக் குறிப்பதால் சிவப்பு நிறம் “நில்” என்று சொல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் “செல்” என்று சொல்ல பச்சை நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறமே உபயோகிக்கப்பட்டது. லண்டனில் 1914ஆம் ஆண்டு, சிவப்பு நிறத்திற்காக விளக்கின் மீது வைக்கப்பட்டிருந்த மூடி கழண்டு கீழே விழுந்துவிட, வெள்ளை நிற விளக்குதான் ஒளிர்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்ட புகைவண்டி ஓட்டுனர் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று மற்றொரு ரயிலின் மீது நேருக்குநேர் மோதிவிட்டார். அந்த விபத்திற்குப் பிறகுதான், “செல்” என்பதற்கு பச்சை நிறம் கொடுக்கப்பட்டது. அதோடு சேர்ந்து புதிதாக “கவனி” என்று அறிவிக்க மஞ்சள் நிற விளக்குகளும் வைக்கப்பட்டன. மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்படக்காரணம், மற்ற இரு வண்ணங்களிலிருந்தும் அதிக வித்தியாசமாக இருப்பதால் தான்.
OLYMPUS DIGITAL CAMERA
1860களில் லண்டன் மாநகரில் குதிரையில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், சாலைகளைக் கடக்கும் பாதசாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகினர்.  எப்படி விபத்துகளைத் தடுக்கலாம் என்று அரசாங்கம் யோசித்துக்கொண்டிருந்தபோது , John Peake Knight என்ற ரயில்வே எஞ்சினியர்(மற்றும் மேனேஜர்) ரயில்வேயில் பயன்படுத்தும் அதே வண்ண விளக்குகள் முறையை ஏன் சாலைகளிலும் உபயோகிக்கக்கூடாது என்று ஐடியா கொடுத்தார். அவரின் ஐடியா ஏற்றுக்கொள்ளப்பட்டு 1868ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள், முதல் ட்ராஃபிக் சிக்னல் லண்டன் பாராளுமன்றத்துக்கு அருகில் நிறுவப்பட்டது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !