Monday, January 7, 2019

அரசு வேலை கிடைக்க இம்மந்திரத்தை துதித்து வந்தால் பலன் உண்டு


நாம் அனைவருமே வாழ்வதற்கு செல்வம் தேவை. ஏதாவது வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றை செய்தால் மட்டுமே நமக்கு செல்வம் கிட்டும். ஆனால் அனைவருக்குமே தொழில், வியாபாரங்கள் கிட்டும். திறனோ, சூழலோ இல்லாததால் பெரும்பாலானவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைகளில் சேர்கின்றனர். இப்படி பணியிலிருப்பவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும், அரசு வேலை பெறும் முயற்சிகளில் இருப்பவர்கள் அது கிடைக்கவும் ஜெபிக்க வேண்டியசெவ்வாய் பகவான் தமிழ் துதிஇதோ.

செவ்வாய் பகவான் தமிழ் துதி :
வசன நல் தைரியத்தோடு மன்னவர் சபையில்
வார்த்தை புஜபல பராக்ரமங்கள் போர் தனில்
வெற்றி ஆண்மை நிஜமுடன் அவரவர்க்கு
நீணிலம் தனில் அளிக்கும் குசன் மகனாம்
செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி

செவ்வாய் பகவானை போற்றும் தமிழ் துதி இது. இந்த துதியை தினமும் காலையில் 27 முறை துதித்து வருவது சிறந்தது. செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானுக்குரிய சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, வீட்டின் பூஜையறையில் கையில் வேல் வைத்திருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு மலர்களை சாற்றி, நெய் தீபம் ஏற்றி இத்துதியை 27 அல்லது 108 முறை துதிப்பதால் வேலைகளில் சாதாரண நிலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும். அரசு பணி பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.


சிறந்த பேச்சாற்றல், மனதில் எதையும் எதிர்கொள்ளும் தைரியம், மன்னர்கள் புலவர்கள் இருக்கும் சபைகளில் பேச்சாற்றலில் வெற்றி, உடல் மனதிடம், போட்டிகள் மற்றும் போர் போன்றவற்றில் வெற்றி, மேலான பேராண்மை குணம் ஆகியவற்றை இப்பூவில் வாழும் மனிதர்களுக்கு அளிக்கும் செவ்வாய் பகவானை போற்றுகிறோம் என்பதே இத்துதியின் பொதுவான பொருளாகும். செவ்வாய் பகவானின் இத்துதியை கூறி வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். இதையும் படிக்கலாமே: சீக்கிரம் வேலை கிடைக்க மந்திரம்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !