Tuesday, January 8, 2019

நிலவில் நியூக்ளியர் பாம்

1950களின் இறுதியில் அமெரிக்கா, நிலவில் நியூக்ளியர் பாம் ஒன்றை வெடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தது. “A Study of Lunar Research Flights (a.k.a “Project A119”) என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் குறிக்கோள், பூமியிலிருந்து பார்க்கும்போது மனிதக்கண்களுக்குத் தெளிவாகத் தெரிவது போல் ஒரு அணுகுண்டை நிலவில் வெடிக்க வைக்க வேண்டும் என்பதாகும். காரணம்?? காரணமென்ன பெரிய காரணம்; பெருமைக்கு எருமை மாடு மேய்த்த கதைதான். நிலவிலும் அணுகுண்டை வெடிக்கவைக்க முடியும் என்று உலகுக்குச்(!!) சொல்வதும், ரஷ்யாவை விட விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காதான் தான் பெரிய ஆள் என்று மக்களுக்கு உணர்த்துவதுமே இதன் குறிக்கோளாக இருந்தது..
bomb
ஒரு வேளை இது நடந்தால், அமெரிக்காவின் மேல் மக்களுக்கு வரப்போகும் “நெகட்டிவ்” விமர்சனத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது. கொடுமை என்னவென்றால், இதே காலகட்டத்தில் ரஷ்யாவும் ”Space Race” என்ற பெயரில் இதே மாதிரி ஒரு ப்ராஜெட்டை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்கா போல், நெகட்டிவ் பப்ளிசிட்டிக்கு பயந்தே ரஷ்யாவும் திட்டத்தைக் கைவிட்டது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !