ஒட்டகப்படை
1840ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களே கிடையாது. ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் பயணம் செய்வதற்கு வசதியாகவும் பொருட்களை எடுத்துச்செல்லவும் ஒட்டகங்கள் தேவைப்பட்டன. இதற்காக இதற்காக இந்தியாவிலிருந்து 1840-ல் 6,000 அரேபிய டிரோம்டாரிஸ் வகை ஒட்டகங்களையும் 1,000 மத்திய ஆசிய இரு திமில்கொண்ட பேக்டேரியன் ஒட்டகங்களையும் இறக்குமதி செய்தது அப்போது ஆட்சியில் இருந்த பிரிட்டீஷ் அரசு. இவற்றில் இரு திமில்கள் கொண்ட ஒட்டகங்கள் கடும் வெப்பப் பகுதியான வட ஆஸ்திரேலியப் பகுதிகளில் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போயின. ராஜஸ்தான், அரேபியா போன்ற வெப்பநிலை கொண்ட வடக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு திமில்கொண்ட இந்திய ஒட்டங்கள் எக்கச்சக்கமாக வளர்ந்திருக்கின்றன.
ஆஸ்திரேலியா மட்டுமல்ல, அமெரிக்காவிலும் கூட ஒட்டக இறக்குமதி நடந்தது. 1850களில் நடந்த இந்த இறக்குமதியால் அதிகம் பலனடைந்தவர்கள் கலிஃபோர்னியா, அரிசோனா போன்ற வரண்ட நிலப்பகுதிகளில் வசித்த மக்களே.. அமெரிக்க ஆர்மியில் குதிரைப்படை மாதிரி கொஞ்ச காலம் ஒட்டகப்படை கூட இருந்தது. ஆனால் வெளியிலிருந்து வந்த ஒட்டகங்களை படை வீரர்களுக்குப் பிடிக்கவில்லை, ஒட்டகங்களும் அவர்களோடு ஒட்டவில்லை. நாளடைவில் இந்தப்படை கலைக்கப்பட்டுவிட்டது.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
Popular Posts
-
ஓர் ஊரில் , வணிகன் ஒருவன் இருந்தான் . பணக்காரனான அவன் சரியான கஞ்சன் . எனவே , முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் ...
-
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன . ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது . கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்...
-
பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன . அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால்...
-
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? 2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? 3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ...
-
குறிப்பு சட்டகம் முன்னுரை வள்ளுவரின் கருத்து ஒளவையாரின் கருத்து உழவின் முக்கியத்துவம் முடிவுரை முன்னுரை ஆதிகாலம் தொட்டு இன்று வரை தமிழர்கள...
-
செ வலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது . அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்தது . இருபத்தியோராம் நாள் முட்டைகள...
-
1. பழமொழி/Pazhamozhi உப்பிட்டவரை உள்ளளவும் நினை. பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. Transliteration ...
-
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார் . தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இர...
-
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது . அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது . அவை இரண்டும் மலைய...
-
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது . ஒரு ஒடுக்கமா...
Featured Post
ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு அமுதம்விளையும் பேசும் பொற்சித்திரமே அன்பு மனம் மா...
About Blog
உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !
No comments:
Post a Comment