தேவையான பொருட்கள்:
ஆப்பிள் : முக்கால் கப் (பொடியாக தோலுடன் நறுக்கியது),
சர்க்கரை : ஒரு தேக்கரண்டி,
தண்ணீர் : ஒரு கப்,
கொழுப்பு நீக்கிய பால்: ஒரு கப்,
சோளமாவு: 2 தேக்கரண்டி,
பேரீச்சம் பழம்: கால் கப் பொடியாக நறுக்கியது,
இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி,
மேலே தூவ வால்நட் : பொடியாக நறுக்கியது சிறிதளவு
சர்க்கரை : ஒரு தேக்கரண்டி,
தண்ணீர் : ஒரு கப்,
கொழுப்பு நீக்கிய பால்: ஒரு கப்,
சோளமாவு: 2 தேக்கரண்டி,
பேரீச்சம் பழம்: கால் கப் பொடியாக நறுக்கியது,
இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி,
மேலே தூவ வால்நட் : பொடியாக நறுக்கியது சிறிதளவு
- ஆழமான நான்ஸ்டிக் வாணலியில் ஆப்பிளை போட்டு அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
- சில நிமிடங்கள் ஆப்பிளை வேகவிடவும். பழம் என்பதால் சீக்கிரமே வெந்துவிடும். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
- சற்று மென்மையாக 5-7 நிமிடங்கள் வேகவிட்டு மசிந்துவிடாமல் கிளறி சற்று கடிக்கும் பதத்தில் இறக்கிவிடவும். இந்த பதம் சுவையைக் கூட்டும்.
- இப்போது மற்றொரு நான்ஸ்டிக் வாணலியில் அரை கப் பாலை ஊற்றிக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும்.
- அது ஆறியவுடன் அதில் சோள மாவை சேர்த்துக் கரைக்கவும்.
- வழக்கமாக கீர் செய்வதைப்போல் பாலை கொதிக்க விட வேண்டியதில்லை. ஒரு கொதி வந்தவுடன் அதில் சோளமாவை சேர்த்துக்கலக்க வேண்டும்.
- கட்டிகள் வராதவண்ணம் நன்றாகக் கிளறவேண்டும்.
- அடுத்து அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும். பேரீச்சம் பழத்தை நன்றாகக் கடைந்துவிட்டால் அதன் மணமும சுவையும் பாலில் கலந்துவிடும்.
- மிதமான சூட்டில் 10 நிமிடங்களுக்கு இடைவிடாது கிளறவும்.
- இப்போது நெருப்பை அனைத்து கீர் நன்றாக ஆறும்வரை விடவும்.
- பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆப்பிளை சேர்த்து இனிப்பூட்டியையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பின்னர் அதை ஒரு அழகான கிண்ணத்தில் ஊற்றி மேலே வால்நட் துகள்களைத் தூவவும்.
- இதனை குளிரூட்டி பரிமாறினால் சுவை சிறப்பாக இருக்கும் இதோ பேரீச்சம்பழம் ஆப்பிள் கீர் தயார்.
No comments:
Post a Comment