Friday, January 4, 2019

ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
ஆப்பிள் : முக்கால் கப் (பொடியாக தோலுடன் நறுக்கியது),
சர்க்கரை : ஒரு தேக்கரண்டி,
தண்ணீர் : ஒரு கப்,
கொழுப்பு நீக்கிய பால்: ஒரு கப்,
சோளமாவு: 2 தேக்கரண்டி,
பேரீச்சம் பழம்: கால் கப் பொடியாக நறுக்கியது,
இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி,
மேலே தூவ வால்நட் : பொடியாக நறுக்கியது சிறிதளவு

  • ஆழமான நான்ஸ்டிக் வாணலியில் ஆப்பிளை போட்டு அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
  • சில நிமிடங்கள் ஆப்பிளை வேகவிடவும். பழம் என்பதால் சீக்கிரமே வெந்துவிடும். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
  • சற்று மென்மையாக 5-7 நிமிடங்கள் வேகவிட்டு மசிந்துவிடாமல் கிளறி சற்று கடிக்கும் பதத்தில் இறக்கிவிடவும். இந்த பதம் சுவையைக் கூட்டும்.
  • இப்போது மற்றொரு நான்ஸ்டிக் வாணலியில் அரை கப் பாலை ஊற்றிக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும்.
  • அது ஆறியவுடன் அதில் சோள மாவை சேர்த்துக் கரைக்கவும்.
  • வழக்கமாக கீர் செய்வதைப்போல் பாலை கொதிக்க விட வேண்டியதில்லை. ஒரு கொதி வந்தவுடன் அதில் சோளமாவை சேர்த்துக்கலக்க வேண்டும்.
  • கட்டிகள் வராதவண்ணம் நன்றாகக் கிளறவேண்டும்.
  • அடுத்து அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும். பேரீச்சம் பழத்தை நன்றாகக் கடைந்துவிட்டால் அதன் மணமும சுவையும் பாலில் கலந்துவிடும்.
  • மிதமான சூட்டில் 10 நிமிடங்களுக்கு இடைவிடாது கிளறவும்.
  • இப்போது நெருப்பை அனைத்து கீர் நன்றாக ஆறும்வரை விடவும்.
  • பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆப்பிளை சேர்த்து இனிப்பூட்டியையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின்னர் அதை ஒரு அழகான கிண்ணத்தில் ஊற்றி மேலே வால்நட் துகள்களைத் தூவவும்.
  • இதனை குளிரூட்டி பரிமாறினால் சுவை சிறப்பாக இருக்கும் இதோ பேரீச்சம்பழம் ஆப்பிள் கீர் தயார்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !