Friday, January 4, 2019

அற்புத சுவையில் ரசகுல்லா செய்வது எப்படி…?

Related image
தேவையான பொருட்கள்: 
  • பால்  1/2 லிட்டர்,
  • எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், 
  • தண்ணீர் 1 கப் மற்றும் 3/4 கப், 
  • சர்க்கரை  3/4 கப், 
  • பாதாம், பிஸ்தா  தேவையான அளவு 
செய்முறை: 
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி  கொதிக்க விடவேண்டும். பால் நன்கு கொதித்த பிறகு அதில் எலுமிச்சைச்சாறு சேர்த்து பால் திரியும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
பாலில் இருந்து தண்ணீர் பிரிந்ததும், அதனை மெல்லிய துணியில் போட்டு தண்ணீர் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும். தண்ணீர் வடிந்ததும், திரிந்த பாலை தனியாக எடுத்து அதனை மென்மையாக பிசைய வேண்டும்.
அடுத்தது பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும். பின்னர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
சர்க்கரை தண்ணிரில் கரைந்து சிறிது கெட்டியான பின்னர் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போடவும். முதலில் குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
பின்னர் மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியாக சர்க்கரை நீரில் போட்ட திரிந்த பால் உருண்டைகள் வெந்ததும், அதனை குளிர வைத்து சிறிது அளவு பாதாம், பிஸ்தாவை அதன் மேல் தூவி பரிமாறலாம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !