Friday, January 4, 2019

பயனுள்ள சமையல் குறிப்பு

பூரி அல்லது சப்பாத்தி செய்யும்போது கோதுமை மாவுடன் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது  சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

வெங்காய பக்கோடாவிற்கு மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்து செய்தால் பக்கோடா மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்க அதை எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைக்க வேண்டும்.

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறினால், பொங்கல் இன்னும் சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலைச் செடிக்கு புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றினால் நன்கு வளரும்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !