Friday, January 4, 2019

தினை ஆப்பம் செய்யும் முறை

Related image
தேவையான பொருட்கள்
தினை – 2 கப்
இட்லி அரிசி – 1/4 கப்
வெள்ளை உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
தேங்காய்ப் பூ – அரை கப்
வடித்த சாதம் – ஒரு கைப்பிடி
உப்பு – தேவைக்கு
சர்க்கரை – 2 ஸ்பூன்
தனியாக ஊறவைத்த பச்சரிசி – 2 ஸ்பூன்
செய்முறை:
தினையுடன் உளுந்து, வெந்தயம், இட்லி அரிசி சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதில் தேங்காய் மற்றும் வடித்த சாதத்தை சேர்த்து நைசாக அரைக்கவும். ஊற வைத்த பச்சரிசியை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
மாவு சூடேறியதும் அடுப்பிலிருந்து எடுத்து விடவும். சூடு தணிந்த பிறகு அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும்.
மறுநாள் மாவு நன்கு புளித்த பிறகு அந்த மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பிறகு அடுப்பில் ஆப்பச்சட்டியை வைத்து நன்கு சூடேறியதும் மாவை ஊற்றி மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும். சுவையான சத்தான தினை ஆப்பம் தயார். குறிப்பு : இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !