Tuesday, November 29, 2022

‘புத்திசாலி பூனையும், அலட்சிய நரியும்’

 ஒரு பூனை ஒரு பெரிய மரத்துக்கும் கீழே நின்னுகிட்டு இருந்திச்சு.

அப்போது  வேட்டைநாய்கள் குறைக்கும் சத்தம் தொலைவுல கேட்டுச்சு. பூனை அதை உற்றுக் கேட்டுச்சு

அந்த மரத்தடிக்கு ஒரு நரியும் வந்திச்சு.
அந்த நரி பூனைக்கிட்ட , ” வேட்டை நாய் சத்தம் கேட்குதே; அதெல்லாம் வந்துட்டா எப்படி தப்பிப்பாயாம்” அப்பிடின்னு கேட்டிச்சு.

அதற்கு பூனை,” நான் உன்னை மாதிரி பெரிய அறிவாளியா? எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்.
இந்த மரத்தின் மீது ஏறி உச்சிக்குப் போய் தப்பிச்சுக்குவேன். அவைகள்லாம் போனதும் மறுபடியும் கீழே இறங்கி வருவேன்” ன்னு பதில் சொல்லிச்சு.
“நீ எப்படி தப்பிச்சுக்குவாய்” ன்னு பூனை நரிகிட்ட திருப்பிக் கேட்டிச்சு.
அதற்கு நரி,”எனக்கென்ன, எனக்கு ஆயிரம் வழி தெரியும்” அப்படின்னு பதில் சொல்லிச்சு.

அப்போ வேட்டைநாய்கள் சத்தம் அருகில் கேட்டதால பூனை மளமளன்னு மரத்தின்மேல ஏறிக்கிச்சு.

வேட்டைநாய்கள் நரியை சூழ்ந்துடுச்சு; கடைசி நேரத்துல ஒன்னும் தோனாமல் நரி மாட்டிக்கிச்சு.
பூனை நரியைப் பார்த்து கேட்டிச்சு, “என்ன நரியாரே, ஆயிரம் வழியில் ஒன்னுகூட நினைவுக்கு வரவில்லையா” அப்படின்னு.


முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை நரியின் நிலைதான். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே தோன்றாது.

1 comment:

Anonymous said...

👍

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !