Monday, June 14, 2021

ஓநாயும் ஆட்டுமந்தையும்

 ஒரு நாள் ஓநாய் ஒன்று அருகில் இருந்த ஆட்டுமந்தையில், இருந்து தனக்கான உணவை அடித்து கொல்ல முயன்றது.அச்சமயம் ஓநாய் ஆடுகளை அடித்துக் கொல்ல முயல்வதை கண்ட ஆட்டுமந்தையின் உரிமையாளர், அந்த ஓநாயை அடித்து விரட்டினார்.ஓநாய் அதிக தூரம் செல்லும் வரை விரட்டியடித்தார்.

பின் இன்னொரு நாள் அதே ஓநாய் ஆடுகளை அடித்து, உணவு உண்ண வந்தது. அச்சமயம் அந்த உரிமையாளரின் வீட்டில் இருந்து நல்ல மணம் வந்தது. என்ன மணம் என்று அறிய எட்டிப்பார்த்த ஓநாய், அங்கு ஆடுகளை வெட்டி அறுசுவை உணவு சமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தது. அச்சமயம் ஓநாய்,“இதை நான் செய்தால் தவறு; அடித்து விரட்டுவீர். ஆனால் நீங்கள் செய்தால் சரியா?” என்று யோசித்தது.

நீதி: நாம் நமது தவறுகளை எண்ணி பார்க்காமல், மற்றவர் செய்யும் தவறுகளைப் பெரிதாக பேசி அவர்களின் மீது குற்றம் சாட்ட முயல்கிறோம். இந்தப் பழக்கத்தை ஒவ்வொருவரும் கைவிட வேண்டும்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !