Tuesday, June 15, 2021

மந்திர வாத்து

 முன் ஒரு காலத்தில் மாயதத்தன் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் தன் ஏழ்மையை எண்ணி தினமும் வருந்தினான்.


ஒரு நாள் மாய வாத்து ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அந்த வாத்து தினம் ஒரு தங்க முட்டையிடும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

மாயதத்தன் அந்த தங்க முட்டைகளை விற்று பெரிய செல்வந்தனாக மாறினான். திடீரென ஒரு நாள் அவனுக்கு விசேசமான சிந்தனை வந்தது. இந்த வாத்து தினம் ஒரு தங்க முட்டையிட்டால் அதன் வயிற்றில் எத்தனை தங்க முட்டைகள் இருக்கும், அவையனைத்தையும் எடுத்து விற்றால் ஒரே நாளில் நாம் இன்னும் பெரிய செல்வந்தனாகி விடலாம் என்று எண்ணி அவன் வாத்தின் வயிற்றை கத்தியால் பிளந்து பார்த்தான். வயிற்றில் ஒரு முட்டை கூட இல்லை, மாயதத்தன் தன் பேராசையால் வாத்தையும் இழந்தான் தங்க முட்டைகளையும் இழந்து வருந்தினான்.

பேராசை பெரு நட்டம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !