Tuesday, May 25, 2021

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்

உண்மையை பேசுவதற்கு

எந்தவொரு சூழ்நிலையிலும்

தயங்காதீர்கள். உண்மையை

பேசுவது இலகுவானது

ஏனென்றால்

என்ன பேசுனீர்கள்

என்பதை நினைவில்

வைத்திருக்க வேண்டிய

அவசியம் இல்லை.

 

பொய் பேசும் போது தான்

நீங்கள் பேசியதை

வாழ் நாள் முழுதும்

ஞாபகம் வைத்திருக்க வேண்டும்

ஏனெனில் நீங்கள்

கூறியதை திரும்பவும்

அதே மாதிரி கூற வேண்டும்.

 

பிரச்சனைகள் வரும் போது

விடியும் என்ற நம்பிக்கையில்

உறங்க போவது போல

முடியும் என்ற நம்பிக்கையில்

மீண்டு வாருங்கள் இந்த

உலகில் அனைத்தையும்

சாதிக்கலாம்.

 

எந்தவொரு இழப்பிலும்

நம்பிக்கையை மட்டும்

இழந்து விடாதீர்கள்

இழந்ததிற்கு மேலாக

பெறுவதற்கான சக்தி

நம்பிக்கைக்கு மட்டும்

தான் உண்டு.

 

நீங்கள் சந்திக்கும்

கஷ்டமான காலம்

எல்லாம் கடுமையான

காலம் என்று எண்ணாதீர்கள்

அந்த காலம் தான் உங்களை

கட்டமைக்கும் காலம்

என்பதை நினைவில்

வைத்துக் கொள்ளுங்கள்.

 

வாழ்க்கையில் சிறப்பான

அனுபவத்தையும்

பாடத்தையும்

கற்று தரும் ஆற்றல்

உங்கள் எதிரிகளை விட

துரோகிகளிடம் தான்

இருக்கிறது.

 

எல்லாம் முடிந்து விட்டது

என்று நினைத்து நாம்

உடைந்து போய் இருக்கும்

இடம் தான் எதோ

ஒரு சிறந்த விடயத்திற்கான

ஆரம்ப இடமாக இருக்கும்.

 

நேற்று நீ செய்த

தவறிற்கான தீர்வை

இன்று நீ கண்டு கொண்டால்

உன் நாளைய தினம்

உயர்வாக இருக்கும்.

 

நம்மக்கு உண்டாகும்

பிரச்சனைகளுக்கு என்ன

தான் மற்றவர்கள் ஆறுதல்

கூறினாலும் அதற்கான

தீர்வும் விடையும் உன்

கைகளில் மட்டும்

தான் இருக்கும்.

 

நம் வாழ்வில் ஏற்படும்

அனைத்து துயரங்களும்

நிச்சயம் ஒரு நாள்

மாறியே தீரும் ஆனால்

ஒரே ஒரு நாளில்

அனைத்தும் மாறி விடாது.

 

அனைவருக்கும் வாழ்க்கையில்

உயரத்தை அடையும்

கனவு இருக்கும். ஆனால்

அதற்கான முயற்சியை

அனைவரும் செய்வதில்லை

ஒரு சிலர் தான் செய்கிறார்கள்.

 

 கதை

 

சர்க்கஸில் இருப்பவர்கள் சிங்கம் மற்றும் புலிகளை சிறிய வயதில் இருந்து வளர்த்து வருவார்கள் ஏனெனில் அப்போது தான் இவர்கள் அந்த குட்டி சிங்கம் மற்றும் புலிகள் மீது பயன்படுத்த முடியும்.

 

அப்பொழுதுதான் அந்த விலங்குகள் சர்க்கஸ் காரர்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கும்.

 

அதன்பின்பு அந்த சிங்கம் பெரிய சிங்கமாக மாறினாலும், சிறுவயதில் பார்த்த பயத்தினால் எவ்வளவு பெரிய சிங்கமாக இருந்தாலும் இந்த சர்க்கஸ் காரர்கள் முன்பு அந்த கம்பீரமான சிங்கம் புலிகள் எல்லாம் ஒரு குட்டி புலி அதான் மற்றும் குட்டி சிங்கமாக தான் இருக்கக்கூடும்.

 

அதுபோல் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல அவமானங்கள் பல கஷ்டங்கள் துயரங்கள் என அனைத்தையும் பார்த்து இருப்பீர்கள்.

 

உங்களை பார்த்து பலர் கொலை என்றும் கூறி இருக்கலாம் மற்றும் இவன் எதற்கும் புரோஜனம் பட மாட்டான் என்றும் கூறி இருக்கலாம்.

 

அப்பொழுது நீங்கள் எதற்கும் உபயோகம் படாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் இப்பொழுது பெற்ற அறிவு அனுபவத்தால் நீங்கள் அந்த விஷயத்தை கைதேர்ந்து இருக்கலாம்.

 

அதனால் நீங்கள் கடந்த காலத்தில் உள்ள அவமானங்கள் மற்றும் இவன் இப்படி கூறி விடுவான் என்றும் கவலைப்படாதீர்கள். அப்படி நீங்கள் கவலைப்பட்டால் இறுதிவரை நீங்கள் மற்றவர்கள் கூறியபடி கொலையாக தான் வாழ்வீர்கள்.

 

எனவே நீங்கள் எந்த விஷயத்தை செய்தாலும் அவன் என்ன கூறுவானா இவன் என்ன கூறுவான் என்று நினைக்காதீர்கள். ஏனெனில் உலகில் யாரும் 100% சரியாக இருப்பதில்லை.

 

அதனால் நீங்களும் உங்கள் குறைகளைப் பற்றி வருந்தாதீர்கள் அந்த படிநிலைகளாக மாற்றலாம் என்று சிந்தியுங்கள்.

 

எனவே நீங்கள் இன்றிலிருந்து எந்த ஒரு காரியத்தை செய்தாலும் மற்றவர்கள் என்ன கூறுவார்கள் மற்றும் வாழ்க்கையில் இறுதிவரை கோழையாக இருந்து விடாதீர்கள்.

 

நீங்கள் குறையாக இருக்கும் வரை தான் மற்றவர்கள் உங்களை குறை என்று கூறுவார்கள் நீங்கள் திறமைசாலியாக பாரி விட்டீர்கள் என்றால் அப்போது பேசிய வாய்கள் எல்லாம் அமைதியாக மாறிவிடும் கைகள் மட்டுமே தட்டப்படும்.

 

எனவே மக்களே நீங்கள் தான் சிந்திக்கவேண்டும் எதற்கும் உபயோகப்படாதவனாக இருக்கப் போகிறீர்களா? இல்லை திறமைசாலியாக மற்றும் அனைவரும் பாராட்டும் இணையத்தில் நீங்கள் சந்தோசமாக வாழ்க போகிறீர்களா? என்று சிந்தியுங்கள்.

 

இறுதியில் இதை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள் உலகில் யாரும் குறை இல்லாமல் இருப்பதில்லை.

 

 அந்தக் குறைகள் இருந்து உங்கள் திறமைகளை எப்படி கண்டுபிடித்து அதில் எப்படி நாம் முன்னேறுவது என்று மட்டும் சிந்தியுங்கள்.

 

 

குறைகளை மட்டும் நினைத்து ஒருபொழுதும் வருந்தாதீர்கள் அது நம்மளுக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இருக்காது.

 

எனவே மக்களே இந்த பதிவில் கூறியபடி உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இதனை அவர்களுக்கு பகிர்ந்து அவர்களை தன்னம்பிக்கை படுத்துங்கள்.

 

இந்த பதிவை முடிந்த அளவுக்கு பகிருங்கள் ஏனெனில் இவ்வுலகில் பல தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

 

 எனவே இந்த பதிவை பகிரும் மூலம் சில தற்கொலைகளை தடுக்கலாம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !