Thursday, March 14, 2019

படித்ததில் பிடித்த அய்க்கூ

அலுவலகம் போகும் பெண்
நகம் வளர்க்கிறாள்
கூட்டமாகவே பேருந்து


போதைவஸ்து கசக்குகிறான்
உள்ளஙகையில் தேய்கிறது
ஆயுள்ரேகை



நீ என்பது தனிமை
நான் என்பது முன்னிலை
நாம் என்பது படர்க்கை!

அய்க்கூ கவிதைகள்

கிழிந்த புடவை
மறைத்து கட்டும் அம்மா
பாவம் தாவணிப்பெண்.

•••••••••••••••••

வேலிகள் தாண்டி
மேயப் பார்க்கின்றன
விழிகள்.

••••••••••••••••••

வரதட்சணை கொடுத்த அப்பா
மகிழ்ச்சியில் திளைத்தார்
கையில் பேத்தி
••••••••••••••
படிச்சிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். 

சுதந்திரக் கனவுகள்...



ஒரு
ஆகஸ்ட் 15-ல்
வெள்ளை இருட்டுகள்
வெளியேறிய பின்

இருநூறு ஆண்டுகளாய்
அடிமைப்புழுதியில்
அழுந்திக் கிடந்த
எங்கள் சுயச்சூரியனை
தூசு தட்டி
ஜனநாயக சட்டை
அணிவித்தோம்

என்னாயிற்று?

ஆயிரமாயிரம்
முன்னோர்களின்
குருதியில் பூத்த
சுதந்திரச் சோலைக்குள்
இன்று
கொரில்லாக்கள் அல்லவா
குடிபுகுந்தன

அரசியல் சிற்பிகளிடம்
செதுக்கச் சொல்லித்தானே
உளி கொடுத்தோம்
சிம்மாசனத்தில் அமர்ந்து
பாரதத்தை
சிதைக்கச் சொன்னது யார்?

இடியாய் விழும்
அரசியல் அடியில்
வலி பொறுக்காத தேசம்
பாஞ்சாலியாய் கதறுகையில்
கை கொடுப்பதாய் வந்த
கண்ணபிரான்களோ
துச்சாதனனுக்கு அல்லவா
துணைபோயினர்?

எல்லோரும் பசியாறத்தான்
சமைக்கப்பட்டது
ஆனால்
சுதந்திரச் சோறு
பரிமாறப்படுவதோ
பணக்காரர்களின் பந்தியில் மட்டுமே

சிதறும் சில
பருக்கைகளும்
சில்லரைக்கே விநியோகம்

பசிக்காய் அழுது... அழுது...
பசி மறந்த பிறகுதான்
இங்கே
கூழ்காய்ச்சவே
திட்டமிடுகிறார்கள்

அழுத குழந்தைகளுக்காய்
ஆப்பம் வாங்கப் போனவர்களின்
ஏப்பச் சத்தத்தில்
எங்கள்
காது பிளக்கிறது

ஆனாலும் இவர்கள்
நன்றி மறக்காதவர்கள்
அதனால்தான்
ஆண்டுகள் ஐந்திற்கு
ஒருமுறையேனும்
எங்கள் வாசலுக்கு
வணக்கம் போட வருகிறார்கள்.

நாங்கள்கூட
புத்திசாலிகள்தாம்

ஆனாலும்
வாக்குறுதி விளக்கில்
விட்டில்களாய் அல்லவா
விழுந்துவிடுகிறோம்.

என்ன செய்வது?

கடிக்கும் என்று தெரிந்தும்
நாய்கள் வளர்ப்பது
எங்கள் நாகரீகமாயிற்றே

- கோ. பாரதிமோகன்.

படித்ததில் பிடித்த அய்க்கூ



பசியைப் போக்கியது
குருணைக் கஞ்சி
பாவம் கோழிகள்

பவுல்ராஜ், புதுகை


அக்னி, வாயு, ஈசான மூலை
அடகில் கிடக்கிறது
சொந்த மூளை

- ராசி. கண்மணி ராசா.



ஜன்னல் வழியே
கைநீட்டும் குழந்தைகள்
வெளியே மழை

- நாணற்காடன், ராசிபுரம்.


கோயில் மணியோசை
பரவசத்தில் மக்கள்
கலவரமாய் புறாக்கள்

- கன்னிக்கோயில் ராஜா, சென்னை.


நிலாப் பெண்ணே... (தினமலர்- வாரமலரில் எனது கவிதை)



•பெண்ணே உன்னை
நிலவாக
மலராக
கதிரின் ஒளியாக
கற்பனை செய்ய
என் மனம் ஏற்கவில்லை.

•காரணம் என்னவென்று
கண்மணியே புரிகிறதா...

•நிலவும் ஒருநாள்
தேய்ந்துவிடும்

•மலரும் மணத்தை
இழந்துவிடும்

•கதிரின் ஒளியும்
மங்கிவிடும்

•ஆகவேதான்
பெண்ண உன்னை...


காதலின் வலிமை



எத்தனையோ
பொய்கள் சொல்லியிருக்கிறேன்
உன்னிடத்தில்...

பொய்யென்றே தெரிந்தும்
ஏற்றுக் கொண்டிருக்கிறாய்
அனைத்தையும்!

'என்னை மறற்திடுங்க' என்று
நீ சொன்ன பொய்யை
பொய்யென்றே
நினைத்திருந்தேன்
பிரிவு நேரும் வரை.

காதலின் வலிமையை
காலங்கள் உணர்த்துமென
காத்திருந்தேன்.

ஜாதியின் வலிமையை
உணர்த்தியது
உன் திருமணம்!

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !