Friday, March 15, 2019

கோணங்கள்


கோணம் – 1

"வாண்ணா", இராகினி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். "அண்ணி வரலையா?" கேள்விக்குறியுடன் நோக்கினாள்.
"இல்லம்மா, ஒரு க்ளையண்ட்ட பார்க்க இந்த பக்கம் பார்க்க வர வேண்டி இருந்தது. அப்படியே உன்னை பார்க்கலாம்னு வந்தேன்", என்றான் இராகவன்."வாண்டு எங்கே", கண்களால் அரவிந்த்தை துளாவினான். "அரவிந்த்தை தானே கேட்கற, அவன் அத்தையோட கோவிலுக்கு போயிருக்கிறான். ஒரு நிமிடம் அவனும் அவங்களை விட்டு இருக்க மாட்டான், அவங்களும் நான் ·பீஸிலிருந்து வந்துட்டேன்னு என்கிட்ட உடனே விட மாட்டாங்க", என்றாள். அவள் மாமியாரைப் பெருமையாக கூறுவது போல் இருந்தாலும், குழந்தை தன்னிடம் வெகு நேரம் இருப்பதில்லை என்ற ஏக்கம் தெரிந்தது. வார விடுமுறையில் பிறந்த வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம், "இப்ப தான் என் பிள்ளையுடன் இருக்க முடிகிறது", என்று கூறுவது இதனால் தானோ? சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்பினான்.

இரவு...

வித்யா பிந்துவைத் தூங்க வைத்து விட்டு அவனருகே வந்து அமர்ந்தாள். "என்னம்மா, வாலு இன்னிக்கு ரொம்ப படுத்திடுச்சோ?", புன்னகையுடன் வினவினான். "ம்ம்... ·பீஸிலிருந்து வந்திருக்கேன்னு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விட்டால் நல்லா இருக்கும். உள்ளே நுழைஞ்ச உடனே என் கையில் ஒப்படைச்சுட்டு போயிடறாங்க...", பெருமூச்சுடன் கூறியனாள் வித்யா.
தங்கையின் ஏக்கத்தையும், மனைவியின் பெருமூச்சையும் நினைத்து இராகவன் மெல்லப்


புன்னகைத்தான்.


கோணம் – 2

'ப்ரியா, கொஞ்சம் பால் குடிம்மா", வசந்தியின் குரலுக்கு செவிசாய்க்காது ப்ரியா ஓடி மறைந்தாள். "ம்ம்... உடம்பை கவனிக்க இந்த பொண்ணுகளுக்கு யாராவது சொல்ல மாட்டாங்களா? டயட், கியட்னு உடம்பை கெடுத்துக்கறாங்க...", புலம்பியபடி வசந்தி சென்றாள். இது பல நாட்களாக நடக்கும் விஷயம்.

சில நாட்கள் கழித்து


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !