Thursday, January 3, 2019

பட்டு போன்ற மேனி வேண்டுமா?


ஒரு நாளைக்கு , ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர்அருந்துபவர்களுக்கு , வயிற்றுப் பிரச்னை வராது . 
வயிறு நலமாக இருந்தால் , நம் உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும் .

குளிப்பதற்கு முன் , ஒரு வாளித் தண்ணீரில் , ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்துகொள்ளுங்கள் . சோப்பு தேய்த்துக் குளித்த பின் , கடைசியாக , " லெமன் பாத் ' எடுங்கள் . இது , புத்துணர்வையும் , சரும மினு மினுப்பையும் தரும்
நாட்டு மருந்துக் கடைகளில் , கார்போக அரிசி என்று கேட்டால் தருவர் . இதைப்பொடி செய்து , மெல்லிய துணியில் சலித்து , ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் . தினமும் , இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு , பேஸ்ட்மாதிரி செய்து , தோலின் மீது பூசவும் . விரைவில் , தேமல் இருந்த இடம்தெரியாமல் போகும் ! 
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி , மிக்சியில் போட்டு அடித்து , அத்துடன் ஒருமூடி , எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து , உடம்பில் தேய்த்து , ஒரு மணி நேரம்ஊறிய பின் குளிக்கலாம்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !