Tuesday, January 1, 2019

புதினா பணியாரம்


புதினா பணியாரம்
 
தேவையானவை
இட்லி அரிசி - ஒரு கப் (பெரியது)
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
புதினா - ஒரு சிறிய கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
நெய் - அரை கப் (சிறியது)


செய்முறை
அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும். கடாயில் சிறிது நெய்விட்டு புதினா, இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை வதக்கி அரைத்துக்கொள்ளவும். இந்தக்கலவை மற்றும் உப்பு சேர்த்து மாவில் ஒன்றாக கலக்கவும். பணியாரக்குழியில் நெய்விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
தேங்காய் சட்னி, சாஸ் இதற்கேற்ற சூப்பர் சைடிஷ்.  

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !