Friday, January 4, 2019

தெரியுமா? - தெரியுமே!


*  ராமபிரானுக்கு  உதவிய  கழுகின்  பெயர்  ஜடாயு.  இது  இறந்தபின்  ராமபிரான்  அதை  எரியூட்டிய  இடம்  ஜடாயு  குண்டம்.  இது  வைத்தீஸ்வரன்
   கோயில்  வைத்தியநாதர்  கோயிலின்  உட்புறத்தில்  உள்ளது.  இந்த  வரலாற்றைச்  சொல்லும்  சிற்பங்களும்  அங்கு  உண்டு.
*  சப்தரிஷிகள் : மரீசி,  அத்திரி,  ஆங்கிரஸ,  பிருகு,  கிருது,  புவஸ்தியர்,  வசிட்டர் ( ஏழாவது தலைமுறை ), பரத்துவர்கள் என்பவர் ஆவர்.
*  கேரளத்தில் தற்போது கரங்கனூர் என்றழைக்கப்படும் துறைமுகம் அந்தக் காலத்தில் முசிறி என்ற பெயரில் புகழ்பெற்றிருந்தது.
*  'நவ' என்ற சொல்லுக்கு புதியது என்றும், ஒன்பது என்றும் பொருள் உண்டு.  உத்தராயண காலத்தில் ( தை - ஆனி ) நடுவில் வருவது வசந்த ருது ( சித்திரை )
   தட்சிணாயண காலத்தில் ( ஆடி - மார்கழி ) நடுவில் வருவது சரத் ருது ( புரட்டாசி ).  இவ்விரு பருவ காலங்களும் எமதர்மனின் இரு கோரைப்பற்களைக்
   குறிக்கும் என்று தேவி பாகவதம் சொல்கிறது.
*  பர்வத ராஜகுமாரியாக விளங்கும் பார்வதிக்கு 'உமா' என்று ஒரு பெயருண்டு.
*  'உமா' என்பதை 'சக்தி பிரணவ மந்திரம்' என்று சாஸ்திரம் கூறுகிறது.
*  'ஓம்' என்னும் பிரணவத்தில் இருப்பது போல, அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்றும் 'உமா' என்ற மந்திரத்திலும் அடங்கியுள்ளது.
*  முள்ளம் பன்றியை நீரில்  அமிழ்த்தி மூழ்கடிக்கவே முடியாது.  காரணம், அதன் மேலுள்ள முட்கள். இந்த முட்களில் வெற்றிடம் நிரம்பியுள்ளது.  இவை பலூன்
   போல முள்ளம் பன்றியை மேலே  மிதக்க வைக்கத்தான் செய்யுமே தவிர மூழ்கடிக்காது

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !