Friday, January 4, 2019

மசாலா வேர்க்கடலை பிரியாணி

Image result for groundnut

தேவையானவை :

  • பாசுமதி அரிசி, மசாலா வேர்க்கடலை – தலா ஒரு கப்
  • வறுத்த வேர்க்கடலை, கொப்பரைத் துருவல் – தலா கால் கப்
  • காய்ந்த மிளகாய் – 6
  • தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • பட்டை – ஒரு அங்குலத்துண்டு
  • பிரியாணி இலை – 1
  • லவங்கம் – 2
  • கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
  • சோம்பு – அரை டிஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை :
வறுத்த வேர்க்கடலையை பொடித்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை உதிராக வேகவைத்து வடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கொப்பரைத்துருவலை வறுத்து, ஆற வைத்து அரைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, சோம்பு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும். வறுத்து அரைத்த பொடியைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கி, மசாலா வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி இறக்கவும். இந்தக் கலவையை சேர்த்து கிளறவும். பின்னர் பொடித்த வேர்க்கடலையைத் தூவி பரிமாறவும்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !