Friday, January 4, 2019

சுவையான இடியாப்பம் பிரியாணி செய்வது எப்படி?

Image result for idiyappam
தேவையான பொருட்கள்:
உதிர்த்த இடியாப்பம்: 10
லவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு தலா: 1
வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு: 2
காலிஃப்ளவர்: ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது: 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்: 1
பொடியாக நறுக்கிய தக்காளி: 2
துருவிய கேரட்: 1
மிளகாய்த்தூள்: 1 டீஸ்பூன்
தனியாத்தூள்: அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்: அரை டீஸ்பூன்
கரம் மசாலா பொடி:அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய், புதினா தேவைக்கேற்ப
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.
அதன் பின் உருளைக்கிழங்கு, கேரட், காலிஃப்ளவர் ஆகியவற்றை ஒன்றாக போட்டு வதக்கவும். இதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி கொத்துமல்லி புதினா சேர்க்கவும். கலவை கிரேவி பதத்திற்கு வந்த உடன் உதித்து வைத்திருக்கும் இடியாப்பத்தை சேர்த்து கிளறி சூடாக பரிமாறலாம்.
காய்கறிகளுக்கு பதில் பொடியாக நறுக்கிய சிக்கன் துண்டுகளையும் சேர்த்து செய்யலாம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !