Wednesday, December 5, 2018

நாயும், கிளியும்!!


Image result for dog parrot
ஒரு ஊர் ஒன்று இருந்துது. அந்த ஊருக்குப் பேர், 'ஊ ஊ'. ஏனந்தப் பேர் எண்டால், அங்கே எப்பவும் சரியான காத்து.... ஊ ஊ என்று சத்தம். அங்கே கன வீடுகள் இருந்தது. அதுல ஒரு வீட்டில், ஒரு பறவை இருந்தது. அது கதைக்கும். அது கிளியாக இருக்கலாம். பக்கத்து வீட்டில் ஒரு நாய் இருந்தது. அங்கே வேறு வீடுகளில் வேறு நிறைய மிருகங்களும் இருந்தது. 

அந்த நாய்க்கு வெளியில போய் splash splash அடித்து தண்ணியில் விளையாட நல்ல விருப்பம். மழை பெய்தால் வெளியில விளையாடப் போய் விடுவார். மற்றவைக்கு விருப்பமில்லை. அந்த இடத்துல நெடுக மழை பெய்யுறதால அவை வேறு எங்கையாவது ஊருக்குப் போகலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தார்கள்.

ஒருநாள் நல்ல மழை. மரமெல்லாம் முறிந்து வீட்டுக்கு முன்னுக்கு விழுந்திருந்தது. மழையில நிறைய தண்ணி, (அப்பா கேட்கிறார்... வெள்ளமா அஞ்சலி?), வெள்ளம்தான் வந்திருந்தது. மரம் இருந்ததால வெள்ளம் வீட்டுக்குள்ளே வரவில்லை. அந்த நாய்க்கு நல்ல சந்தோஷம். வெளியில் போய் நல்லா விளையாடி, தண்ணியில நீந்தி நீந்தி விளையாடி, மரத்தையும் இழுத்துக் கொண்டு போய்விட்டார். அதனால் வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணி வந்து விட்டது. அப்போ எல்லாம் மிருகங்களுக்கும் சரியான கோபம் வந்தது. கிளி சொன்னது நாங்கள் இவரை வெளியில கலைச்சு விடுவம், இவர் இங்க வரக்கூடாது என்றது. எல்லோரும் ஓமென்று சொல்லி நாயை கலைத்து விட்டார்கள்.

நாய்க்கு நல்ல சந்தோஷம். அவர் வெளியில நின்று, நிறைய நேரமா விளையாடினார். 3 நாள் போனதும், அவருக்கு சரியான கஷ்டமா போச்சுது. சரியான குளிரும். அப்ப அவர் திரும்பி வீட்டுல வந்து கேட்டார், என்னை வீட்டுல விடுங்கோ, நான் இனி குழப்படி செய்ய மாட்டன் என்று. அவையளும் சரியென்று சொல்லி, வீட்டுக்குள்ளே விட்டார்கள். அதன் பிறகு நாய் குழப்படி விடாமல் அவர்களுடன் சேர்ந்து இருந்தார். எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !