Thursday, February 18, 2021

கார் இருப்பது எதற்காக?

 ஒரு ஊரில் செட்டியார் ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்ந்தார்.

அவரிடம் கார் ஒன்றும், மாட்டு வண்டி ஒன்றும் இருந்தது.

ரெங்கூனில் இருந்த செட்டியாருடைய வட்டிக் கடையை அரசு சட்டம் காரணமாக, மூடும்படி ஆயிற்று. பின்னர், அங்கே இருந்த நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொண்டது.
செட்டியாரின் வசதிகள் யாவும் குறைந்து விட்டது, மாட்டு வண்டியை விற்று விட்டார். வேலை ஆட்களையும் விலக்கி விட்டார்.

வீட்டில் இருந்த நகைகள் முதலானவற்றை விற்று, மிகுந்த சிக்கனத்தோடு வாழ்ந்து வந்தார்.

அந்த நிலையில் காரை மட்டும் விற்க வில்லை. டிரைவரையும் விலக்கி விட்டார். காரும் பழுதாகி விட்டது. ஆனால் அதை விற்கவில்லை .

தினமும் விடியற்காலையில், செட்டியார், அவருடைய மனைவி, அவருடைய மகன் ஆகிய மூவரும் ஷெட்டிலிருந்து தள்ளிக் கொண்டு வந்து வீட்டின் முன் நிறுத்துவார்கள். இரவு பத்து மணிக்குப் பிறகு. முன்போல், காலை மூவரும் தள்ளிக் கொண்டு போய் ஷெட்டில் நிறுத்துவார்கள்.

ஒரு நாள் செட்டியாரின் மகன், “ஓடாத காரை விற்றுத் தொலைக்காமல் காலையில் தள்ளிக் கொண்டு வந்து நிறுத்துவதும், இரவில் தள்ளிக் கொண்டு போய் ஷெட்டில் விடுவதும் ரொம்பவும் சிரமமாக இருக்கிறது” என்று, சங்கடப்பட்டான்.

அதற்குச் செட்டியார், “கௌரவமாக வாழ்ந்தேன். கார் வைத்துக் கொண்டிருப்பதால் பெருமை இருக்கிறது; ஊரார். உறவினர் மதிப்பு வைத்திருக்கின்றனர்.

நல்ல செழிப்புள்ள குடும்பத்திலிருந்து, உனக்குப் பெண்ணைக் கொடுக்க முன்வருவார்கள். திருமணம் நடந்த பின், காரை விற்று விடலாம்” என்றார்.

நொடித்துப் போனாலும், சிலர், கௌரவத்துடன் இருப்பதாக வெளியில் காட்டிக் கொள்வது இயல்பு. அது ஒரு போலியான வாழ்க்கை !

- மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம் 

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !