Sunday, November 22, 2020

2 பிரிஞ்சி இலையை எரித்தால் வீட்டில் அதிசயம் நடக்குமா? அது எப்படின்னு நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

 மசாலா பொருட்களில் பிரிஞ்சி இலை மிகவும் முக்கியமான ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ இவைகளை போலவே பிரிஞ்சி இலையும் விசேஷமான தன்மைகளைக் கொண்டுள்ளது. பிரிஞ்சி இலையில் அதிக அளவில் கனிம சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளதால் இவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பிரிஞ்சி இலை சமையல் விஷயங்களில் மட்டும் அல்லாமல், வீட்டிற்குள் சுற்றி இருக்கும் அசுத்தமான காற்றையும், நல்ல காற்றாக மாற்றக்கூடிய தன்மை உள்ளது என்பது குறிப்பிடதக்க ஒன்றாக இருந்து வருகிறது. இரண்டு பிரிஞ்சி இலைகளை எரித்தால் நிகழும் அதிசயங்களை கேள்வி படுவதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும். அப்படி இதனால் நமக்கு என்ன அதிசயம் நிகழும்? இதனை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.


பிரிஞ்சி இலையில் மைர்சீன், யூஜெ‌னோல் என்கிற மூலக்கூறுகள் அலர்ஜி சார்ந்த விஷயங்களிலிருந்து எதிர்ப்பு ஆற்றல்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் இருந்தால் மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் வீக்கம் போன்ற தொந்தரவுகள் காணப்படலாம். இவற்றை நீக்கும் சக்தி இந்த பிரிஞ்சி இலைக்கு உண்டு. இதை எப்படி வீட்டில் பயன்படுத்துவது?


இரண்டு பிரிஞ்சி இலைகளை வீட்டில் எரிக்கும் பொழுது அதிலிருந்து வரும் புகையானது வீட்டை சுற்றியுள்ள அசுத்தக் காற்றை சுத்தமான காற்றாக மாற்றி தருகிறது. அது மட்டுமல்லாமல் அதனை நுகரும் நமக்கு மனநிலையில் இருக்கும் மாற்றத்தை சீர்செய்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் இந்த புகை நமக்கு உதவியாக இருக்கும். இதனுடைய வாசம் மூளையின் நரம்புகளை ரிலாக்ஸாக்கி நம்முடைய மனதை லேசாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


இரண்டு பிரிஞ்சி இலைகளை வீட்டில் எரிக்கும் பொழுது அதிலிருந்து வரும் புகையானது வீட்டை சுற்றியுள்ள அசுத்தக் காற்றை சுத்தமான காற்றாக மாற்றி தருகிறது. அது மட்டுமல்லாமல் அதனை நுகரும் நமக்கு மனநிலையில் இருக்கும் மாற்றத்தை சீர்செய்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் இந்த புகை நமக்கு உதவியாக இருக்கும். இதனுடைய வாசம் மூளையின் நரம்புகளை ரிலாக்ஸாக்கி நம்முடைய மனதை லேசாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


இது போல் தொடர்ந்து ஆறு முறை செய்யுங்கள். அதன் பிறகு கதவை திறந்து மற்ற அறைகளுக்கும் அந்த புகையை பரவச் செய்யுங்கள். வீட்டில் இருக்கும் அசுத்தமான காற்று தூய்மை அடையும். இதனால் வீட்டில் எதிர் மறை சக்திகள் நீங்கி புத்துணர்வு பெறும். வீடு மட்டுமல்லாமல் நீங்களும் உங்களுடைய மன இறுக்கத்திலிருந்து தளர்ந்து விடுதலை பெறுவீர்கள். அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். செய்து பார்த்து பயனடையுங்கள்.



No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !