Saturday, May 11, 2019

பேரீச்சம்பழம் பயன்கள் மற்றும் நன்மைகள்

உலகத்துக்கு அரபு உலகம் தந்த அரிய கொடை, பேரீச்சம்பழம். இது, சத்துகள் நிறைந்த ஒரு பெட்டகமாகவே திகழ்கிறது. குறிப்பாக, இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.
பேரீச்சம்பழத்தை அன்றாடம் சாப்பிடும்போது அது அள்ளித்தரும் நன்மைகள் பற்றிப் பார்ப்போம்…
பேரீச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் நிறைந்துள்ளன.
குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. அதனால் தினமும் பேரீச்சம்பழம் உட்கொண்டால் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.
பேரீச்சம்பழத்தில் இருக்கும் தாதுக்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கின்றன. எலும்பு தேய்மானம், எலும்பு சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் தினசரி பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.
பேரீச்சம்பழத்தில் செலினியம், தாமிரம் போன்ற சத்துகளும் இருக்கின்றன. இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகின்றன.
தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது, குடலியக்கத்தையும் சீர் செய்கிறது.
பேரீச்சம்பழத்தில் வைட்டமின் ஏ, பி போன்றவை அதிகம் உள்ளன. இவை, சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகின்றன, சுருக்கங்களைப் போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகின்றன.
பேரீச்சம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றன.
இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி 6 போன்றவை ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகின்றன. இதனால் ரத்தசோகை பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண முடியும்.
உலர்ந்த பேரீச்சம்பழங்கள் அப்படியே உண்ண ஏற்றவை. வாதாம்பருப்பு, பாதாம்பருப்பு, பாலாடைக்கட்டி ஆகியவற்றுடன் பேரீச்சையைச் சேர்த்து ஆவியில் வேகவைத்தும் சாப்பிடலாம். பழ சாலட்டுகளில் பேரீச்சைத் துண்டுகளைச் சேர்த்தால் சுவை கூடும்.
பேரீச்சை ஜூஸ் உடலுக்கு நல்ல சக்தி அளிக்கக்கூடியது. பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து பேரீச்சைச் சாறு தயாரித்து சத்துபானமாக அருந்தலாம்.
சுவையோடு சத்து அளிக்கக்கூடிய உணவுப்பொருட்களில் பேரீச்சை முக்கியமானது. அதை நமது அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் காக்கலாம்!
பேரீச்சம்பழம் மருத்துவ பயன்கள்
உடல் சக்தி
க்ளுகோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரிச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன.ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும்பெருமளவில் அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரிக்கும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம். இதில் இருக்கும்விட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க பயன் தருகின்றன.
எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்
பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்புதேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம்சாப்பிடலாம்.
இதில், செலினியம், காப்பர் போன்ற சத்துகளும் இருக்கின்றன, இவை எலும்புகளின் வலிமையைஅதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றன.
செரிமானம் சரியாகும்
தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணஇயலும். இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது, இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கஉதவுகிறது. மற்றும் குடலியக்கத்தையும் சீர் செய்கிறது.
சருத்திற்கு நல்லது
பேரிச்சம்பழத்தில் நிறைய விட்டமின் ஏ, பி போன்றவை இருக்கின்றன. இவை, சருமத்தின்தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இரத்த சோகைக்கு தீர்வு
பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்பு, விட்டமின் சி, பி 6 போன்றவை இரத்தத்தில் இருக்கும்ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்லதேர்வு காண முடியும்.
சாப்பிடும் முறை
உலர்ந்த பேரீச்சம் பழங்கள் அப்படியே உண்ண ஏற்றது. வாதாங்கொட்டை, பாதாம் பருப்பு, சீஸ்,கலர்ப்பொடி ஆகியவற்றுடன் பேரீச்சையும் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம். பழசாலட்டுகளில் பேரீச்சை துண்டுகள் சுவை சேர்க்கும்.
பேரீச்சை ஜூஸ் உடலுக்கு பேராற்றல் வழங்கக் கூடியது.
பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து ‘டேட்ஸ் சிரப்’ தயாரித்துசத்துபானமாக அருந்தப்படுகிறது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !