Wednesday, January 23, 2019

பிரமிட் சாப்பாடு

சத்துள்ள உணவு, சமச்சீர் உணவு வரிசையில் உணவு பிரமிட்(Pyramid க்கு தமிழ் வார்த்தை ஏதும் இருக்கிறதா?) மக்களால் அதிகம் கவனிக்கப்படும், அரசாங்கங்களால் சப்போர்ட் செய்யப்படும் ஒரு விஷயம். இந்த உணவு பிரமிட் முதன் முதலில் ஸ்வீடனில் உருவாக்கப்பட்டது. 1970களில் ஸ்வீடன் அரசாங்கம், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைப் பார்த்த பின், தங்கள் நாட்டின் சுகாதார அமைப்பான Socialstyrelsen (National Board of Health and Welfare)ஐ அழைத்து, மக்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டியது. அந்த அமைப்பிலிருந்தவர்கள், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளைத் தரும் உணவுப் பொருட்கள், வைட்டமின் சத்துகள் அதிகமிருக்கும் உணவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் என்று பிரித்து மக்களிடையே விளம்பரப்படுத்தினர். ஆனால், பிரமிட் மாதிரியான அமைப்பை அவர்கள் உருவாக்கவில்லை.
USDA_Food_Pyramid
ஸ்வீடன் நாட்டின் அரசாங்க கூட்டுறவுக்கடையில் வேலை செய்த Anna Britt Agnsäter என்ற பெண் தான், சுகாதார அமைப்பு வெளியிட்ட உணவுப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த Food Pyramidஐ உருவாக்கினார். 1992ஆம் ஆண்டு அமெரிக்காவின் USDA அமைப்பு தங்கள் சார்பாக ஒரு உணவு பிரமிட் சார்ட்டை வெளியிட்டது.
ஒன்று தெரியுமா, இந்த மாதிரி உணவு பிரமிட் வெளியிட்ட பின்புதான் obesity எனப்படும் அதீத உடல் எடை பிரச்னை அதிகமானது. சார்ட்டை தப்பாகப் புரிந்துகொண்ட மக்கள் எக்கச்சக்கமாக பிரட் வகைகளைச் சாப்பிட்டு வைக்க, அவை மக்களின் உடல் எடையை பாதிக்கத் தொடங்கியதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !