Thursday, January 3, 2019

அளவுக்கதிகமான பருத் தொல்லைக்கு ...



* ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து, வெயிலில் காய வைத்து பொடி செய்து, காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து, முல்தானி மிட்டி, ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து, வாரம் இருமுறை அல்லது மூன்று முறை உபயோகிக்கவும். இதை, அரை மணி நேரம் காயவிட்டு,
பிறகு விரல்களை ஈரப்படுத்தி, லேசாகத் தேய்த்து, குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவவும். தீராத பருத்தொல்லை கூட இந்த முறையில் குணமாகும். 
* ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை, தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி, ஈரமான விரல்களால் தேய்த்து கழுவினாலும் பருக்கள் குறையும். கோதுமைத் தவிடு ஒரு தேக்கரண்டி, சந்தனப் பவுடர் ஒரு தேக்கரண்டி, சிறிது பன்னீர் கலந்து, முகத்தில் தடவிக் காய்ந்ததும் எடுத்து விடவும். 
* நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஐஸ் கட்டிகளால் முகத்தை தேய்க்கவும். இது, சருமத்திலுள்ள அதிகப் படியான எண்ணெய் பசையை அகற்றும்

பருத்தொல்லைக்கு பொடுகும் ஒரு முக்கிய காரணம். கூந்தலை வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்து, தயிர் உபயோகித்துக் குளித்து வந்தால், பொடுகு நீங்கும்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !