Tuesday, January 1, 2019

விடுகதை


1)ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?

2)சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?

3)ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன?

4)ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள்.அவன் யார்?

5)பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?

6)குதிரை ஓட ஓட வால் குறையும்.அது என்ன?

7 )பூக்கும்,காய்க்கும்,வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது.அது என்ன?

8 )தொப்பைப் பையனுக்கு ஒரு வாசல். தோழனுக்கு இரண்டு வாசல்.அவன் யார்?

9 ) அடிப்பக்கம் மத்தளம்,இலை பர்வதம், குலை பெரிது,காய் துவர்ப்பு,கனி தித்திப்பு - அது என்ன?

10 )ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான்.அவன் யார்?   

11)இடி இடிக்கும், மின்னல் மின்னும்,ஆனால் மழை பெய்யாது.- அது என்ன?

12 )ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஆரவாரம் இராது.அவர்கள் யார்?

13 )எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது.அது என்ன?

14 ) குடிக்க உதவாத நீர் , குளத்தில் தங்காத நீர் , தொடமுடியாத நீர் ,கண்களுக்கு மட்டுமே தெரியும் நீர் .அது என்ன?

15 ) காலில் தண்ணீர் குடிப்பான்.தலையில் முட்டையிடுவான். அவன் யார்? 

16) நீருக்குள் இருக்கும்; மீனும் அல்ல. வெளியில் வந்தால் எரியும்; நெருப்பும் அல்ல அது என்ன?

17) ஊர்ந்து தவழ்ந்து அலையும், ஊழியந்தனில் உயரும், கூர்ந்து நகர்ந்து எங்கும் கூடி இரையைச் சேர்க்கும், கண்ணில்லாச் சிறிய உயிர். அது என்ன?

18) பனி ஊரில் பிறந்த பழம், பார்க்கச் சிவப்புப் பழம், தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரை விரட்டும் பழம். அது என்ன?

19) முட்டையிடும் குஞ்சு பொரிக்காது, கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன?

20) எட்டெழுத்து ஊர் அதுவாம், யார்க்கும் தெரிந்த ஊர் அதுவாம், முதலும் இரண்டும் அழகாகும். மூன்றும் நான்கும் பதிலாகும். அய்ந்தும் ஆறும் மருந்தாகும். ஏழும் எட்டும் அடிமரமாம். அந்த ஊர் எந்த ஊர்?

21) சேலை  ஊடுத்தியிருக்கும் பெண்ணல்ல; அதனுள்ளே முத்து இருக்கும்; சிப்பியல்ல, தாடியுண்டு கிழவனல்ல மக்களுக்கு உணவாகும். அது என்ன?

22) உச்சியில் பூவிருக்கும் ஊருணிக் கரையிலிருக்கும் வெள்ளம் புரண்டு வந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. அது என்ன?

23) பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயல்ல. உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயல்ல. உருக்கினால் நெய்வடியும் வெண்ணெய் அல்ல. அது என்ன?

24)கடல் நீரில் பிறந்தானாம் வெள்ளையப்பன்.மழை நீரில் மறைந்தானாம்
வெள்ளையப்பன்......அவன் யார்?

25)உயர்ந்த இடத்தில் பிறந்தானாம் ஒரு ஜாணு மனுஷன்,ஒரு ஜாணு மனுஷனுக்கு அரை ஜாணு குடுமி...............அவன் யார்?

26)மூடித் திறக்கும் பெட்டி முத்திருக்கும் பெட்டி பாட்டுப் பாடும் பெட்டி
பாம்பிருக்கும் பெட்டி...............அது என்ன பெட்டி?

27)காகிதத்தைப் பார்த்தாலே குட்டியக்கா கண்ணீரு வுடுவாளே குட்டியக்கா
முக்காடு போட்டிருப்பா குட்டியக்கா சொருக குச்சி வச்சிருப்பா குட்டியக்கா......அவள் யார்?

28)மரம் போல வளர்ந்திருக்கும்  வேர் இருக்காது  கிளையிருக்கும் கிளைதனிலே இலை இருக்காது..................அது என்ன?

29) மஞசள் போர்வைக்குள் வெள்ளையப்பன்.அது யார்?

30) பகிர்ந்து உண்ணும் கருத்தம்மா ஆகாயத்தோட்டியும் நான் தானே?

31)உப்புத் தண்ணியோடு உருளுது ஒரு பந்து.அது என்ன?

32)கோயிலைச் சுற்றி கருப்பு! கோயிலுக்குள் வெளுப்பு! அது என்ன? 

33)யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?

34)அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?

35)சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது என்ன?

36) சித்திரையில் சிறு பிள்ளை வைகாசியில் வளரும் பிள்ளை ஆனியில் அழகுப்பிள்ளை ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?  

37) உங்கள் அக்கா குளித்ததும் கருப்பு. எங்கள் அக்கா 
குளிக்காமல் சிகப்பு. அது என்ன?

38)
அள்ள அள்ள பெரிதாகும். அது என்ன?

39)
துடித்து இடி இடிக்கும். சடசடவென்று படபடக்கும்.
அது என்ன?

40)
இரட்டைக் கிளவியில் ஒற்றை ஓணான் .அது என்ன?

41)
எங்க அக்கா குள்ளக்கா...எது வைத்தாலும் தாங்கும்க்கா..
அது என்ன?

42)
பச்சை பச்சை டாக்டர், பால் பால் டாக்டர், குண்டு குண்டு
டாக்டர், குதிரை வால் டாக்டர்..அது என்ன?

43)
ஆழக் குழி தோண்டி அதிலே ஓர் முட்டை இட்டு
அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை..அது என்ன?

44)
ஏணி, ஏணி மேலே கோணி, கோணி மேலே குண்டு,
குண்டு மேலே புல்லு, அது என்ன?

45)
பையில் இது இருந்தால் வேறு எதுவும் இருக்காது - அது என்ன?

46)
நூறு கிளிக்கு ஒரே வாய் - அது என்ன?

47) பயந்தால் விட மாட்டான். பழகினால் மறக்க மாட்டான் 
அது என்ன?

48)
உச்சிக்கிளையில் சாட்டை தொங்குது - அது என்ன?

49)
ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன் , ஊருக்கு
செல்லப்பிள்ளை - அது என்ன?

50)
வாசலில் பூத்திருக்கும் வாழ்வரசி - அவள் யார்?

51) பிடிக்கவே முடியாத கள்வன் அவன் யார்?

52) பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும் - அது என்ன?

53)
மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன?

54)
கொடுக்க முடியும், எடுக்க முடியாது - அது என்ன?

55)
அண்ணன் தம்பி சேராவிட்டால் ஊருக்கெல்லாம்
கொண்டாட்டம் - அது என்ன?

56)
சிவப்புப் பெட்டிக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது -அது என்ன?

57) மூன்று கண்கள் இருக்கும், இவனால் பார்க்க முடியாது -
அது என்ன?

58)
நெருப்பு பட்டால் அழுவான் - அவன் யார்?      

59)
அடியில் உள்ளவன் அடக்கமாயிருப்பான் மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான் - அவன் யார் ?

60)
ராத்திரி பிறந்த பையன் தலைப்பாகையுடன் பிறந்தான் -அவன் யார் ? 

61)
விழுந்தால் படுக்காது அழந்தால் நிற்காது - அது என்ன ? 

62)
ஆகாயத்தில் காற்றுக்கு ஆடும் அரிவாள்கள் - அது என்ன ? 

63)
நான் ஏறும் குதிரை நாலு கால் குதிரை ,அந்த குதிரைக்கு ஆயிரம் கண்கள் - அது என்ன? 

64)
வேகமாய் போகிற அம்மணிக்கு விழுந்த கைக்குட்டையை எடுக்க நேரமில்லை - அது என்ன ?

65)
நாளெல்லாம் நடந்தால் கூட நான்கடி செல்லாத நாயகன் அவனுக்கோ உடல் முழுக்க கவசம் வேறு - அது என்ன ? 

66)
ஆற்றோரம் பிறந்து அழகழகாய் விரிந்து சந்தைக்கு வந்து மாமன் வாங்கிபோனால் மங்கை நல்லாள் சிரிப்பாள் - அவள் யார் ?  

67)
குதி குதியெனக் குதிக்கிறான், கொட்டைப்
பல்லால் சிரிக்கிறான் - அது என்ன?

68)
குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?

69)
குட்டியும் போடும், குவலயத்திலும் பறக்கும் - அது என்ன?

70)
குட்டைப் பெண்ணுக்கு எட்டு முழச்சேலை - அது என்ன?

71)
குடுக்கை நிறைய வைரமணி - அது என்ன?


விடைகள்
1)திருவாவினன்குடி


2)காய்ந்த சிவப்பு மிளகாய் (மிளகாய் வற்றல்)
3)தேன்கூடு
4)குடை
5)நிலக்கடலை
6)ஊசி நூல்
7)இலவம்பஞ்சு
8)சட்டை
9)வாழை மரம்
10)காகம்
11) பட்டாசு
12 )எறும்பு
13 )மின் விசிறி / காற்றாடி
14 )கானல் நீர்
15 )தென்னை மரம்
16) பாஸ்பரஸ்
17) எறும்பு
18) ஆப்பிள்
19) குயில்
20) திருவிடைமருதூர்
21) மக்காச்சோளம்
22) நாணல்
23) ஆமணக்குக்காய்
24) உப்பு
25) தேங்காய்
26) வாய்
27) பேனா
28) தந்திக் கம்பம்
29)வாழைப்பழம்
30)காகம்
31) கண்ணீர், கருவிழி
32) சோற்றுப்பானை
33) கரப்பான்பூச்சி 
34) சூரியன் - நிலவு 
35) அஞ்சல் பெட்டி 
36) பனம்பழம்
37) அடுப்புக் கரி/நெருப்பு
38) குழி (பள்ளம்)
39) பட்டாசு, வெடி
40) இரயில் வண்டி
41) அடுப்பு
42) வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
43) தென்னை மரம்
44) மனிதன்
45) ஓட்டை
46) வாழைப்பூ
47)  நாய்
48) முருங்கை காய்
49) வெற்றிலை
50) கோலம்
51) புகை
52) தேன்
53) தேங்காய்
54) கல்வி
55) தண்டவாளம் 
56) மிளகாய் வற்றல் 
57) தேங்காய்
58) மெழுகுவத்தி    
59) பாக்கு வெட்டி  
60) காளான்
61) தஞ்சாவூர் பொம்மை
62) புளியங்காய்
63) கயிற்றுக் கட்டில்
64)  பறவை இறகு
65)
நத்தை
66)
கோரைப் பாய்
67)
சோளப்பொறி
68)
அழுகை
69)
வௌவால்
70)
நீர் இறைக்கும் வாளி
71)
மாதுளம் பழம்



No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !