Tuesday, January 22, 2019

சமையலறைக்குத் தேவையான பயனுள்ள சிறுசிறு குறிப்பு

அசைவ உணவு சமைத்து, சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களை என்னதான் dish soap போட்டுக் கழுவினாலும் அசைவ வாசனை சரியாகப்போகாது. அத‌னால் கழுவி முடித்த பிறகு சிறிது கடலைமாவு அல்லது பச்சைப்பயறு மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் வாசனை போன இடம் தெரியாது. பாத்திரமும் பளிச்.
இதேதான் எண்ணெய் பாத்திரங்களுக்கும்(வாணல்). கடலைமாவு போட்டுக் கழுவினால் பளிச் என மின்னும்.
இதுவே கைகளுக்கும் பொருந்தும்.
**********************************************************************************
பீன்ஸை ச‌மையலுக்குப் பயன்படுத்தும்போது நாம் அதன் காம்பு & நுனி பகுதியை நறுக்கி போட்டுவிடுவோம்தானே. அந்த நுனிப்பகுதியில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளனவாம். ஒரு பக்கம் மட்டும் நறுக்குவதால் வேலையும் மிச்சம்.
*****************************************************************************************
இஞ்சியின் தோலை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்குத்தானே தெரியும். சிறு துண்டு என்றால் நகத்தாலேயே நீக்கிவிடலாம். அதிக அளவில் என்றால் ? கத்தியைப் பயன்படுத்தினாலும் நிறைய இஞ்சி வீணாகும். அதற்கு பதிலாக இப்படி ஸ்பூனால் சுரண்டினால் இஞ்சியில் சிறிதும் வீணாகாமல் தோல் மட்டுமே தனியாக வந்துவிடும். 

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !