பெப்பர் சிக்கன்
தேவையான பொருள்கள்: சிக்கன் - அரை கிலோ மிளகு - 25 கிராம் சோம்பு - அரைத்தேக்கரண்டி கிராம்பு - 2 எண்ணெய் - 100 மில்லி இஞ்சி - 10 கிராம் பூண்டு - 10 கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: மிளகு, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பூண்டு இவற்றை நன்றாக மைபோல் அரைத்து கொள்ள வேண்டும். சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் வதக்க தேவையான அளவு எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும்படி நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் கழுவிய சிக்கன் துண்டங்களை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு சிக்கன் துண்டங்கள் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விட வேண்டும். சிக்கன் நன்கு வெந்தவுடன் தண்ணீர் இல்லாத அளவிற்கு குறைந்த அனலில் 5 நிமிடம் வைத்து இறக்கினால் பெப்பர் சிக்கன் ரெடி.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
Popular Posts
-
ஓர் ஊரில் , வணிகன் ஒருவன் இருந்தான் . பணக்காரனான அவன் சரியான கஞ்சன் . எனவே , முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் ...
-
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன . ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது . கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்...
-
பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன . அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால்...
-
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? 2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? 3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ...
-
செ வலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது . அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்தது . இருபத்தியோராம் நாள் முட்டைகள...
-
குறிப்பு சட்டகம் முன்னுரை வள்ளுவரின் கருத்து ஒளவையாரின் கருத்து உழவின் முக்கியத்துவம் முடிவுரை முன்னுரை ஆதிகாலம் தொட்டு இன்று வரை தமிழர்கள...
-
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார் . தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இர...
-
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது . அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது . அவை இரண்டும் மலைய...
-
1. பழமொழி/Pazhamozhi உப்பிட்டவரை உள்ளளவும் நினை. பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. Transliteration ...
-
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது . ஒரு ஒடுக்கமா...
Featured Post
ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு அமுதம்விளையும் பேசும் பொற்சித்திரமே அன்பு மனம் மா...
About Blog
உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !
No comments:
Post a Comment