Monday, December 10, 2018

பூதம் காத்த புதையல்


பரமார்த்த குருவும் சீடர்களும் படுத்துத் தூங்கிக் கொண்டுஇருந்தார்கள்.
தூக்கத்தில், “ஆகாதங்கம்வெள்ளிவைடூரியம்!” என்று உளறிக்கொண்டு இருந்தார், பரமார்த்தர்.
திடுக்கிட்டு எழுந்த சீடர்கள், குரு உளறுவதைக் கண்டு அவரைதட்டி எழுப்பினார்கள்.
தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பரமார்த்தர், “புத்திகெட்டவர்களேஏன் என்னை எழுப்பினீர்கள்? அற்புதமான கனவுஒன்று கண்டு கொண்டு இருந்தேன்கெடுத்து விட்டீர்களே!” என்றுசீடர்களைத் திட்டினார்.
உடனே எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு கனவா? என்ன கனவு கண்டீர்கள்?” என்றுகேட்டார்கள்.
பரமார்த்தர், சிறிது நினைவுபடுத்தி, “புதையல்புதையல்!” என்று கத்தினார்.
“புதையலா? எங்கே? எங்கே?” என்று குதித்தார்கள், சீடர்கள்.
பிறகு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “சீடர்களே, இந்த அறையின் பின்னால் உள்ளதோட்டம் தான் என் கனவில் வந்ததுதோட்டத்தின் சனி மூலையில் ஒரு பானை நிறையபொன்னும் வெள்ளியுமாய்க் கிடக்கிறது!” என்று மெல்ல கூறினார்.
“அடேயப்பாபானை நிறைய தங்கமா?” என்று மகிழ்ச்சியால் கீழே விழுந்து புரண்டான்மட்டி.
“குருவேஇந்தப் புதையலை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?” என்று கேட்டான்மூடன்.
அதற்குள் முட்டாள், “நம் குருவுக்குப் பெரிய குதிரையாக, அழகான குதிரையாகவாங்கலாமே!” என்று பதில் சொன்னான்.
“நாம் கூட ஆளுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொள்ளலாம்!” என்று மகிழ்ந்தான் மட்டி.
“குருவேஇந்த இடம் சரியில்லைஇதை இடித்து விட்டு ராஜாவுக்குப் போட்டியாகஅரண்மனை கட்ட வேண்டும்!” என்று யோசனை சொன்னான் மூடன்.
“இனிமேல் நமக்குக் கவலையே இருக்காதுதினமும் வடையும் பாயாசமுமாகச்சாப்பிடலாம்!” என்று குதித்தான், மடையன்.
“குருவேஅப்படியானால் நாம் எல்லோரும் இப்போதே ஓடிப்போய் அந்த இடத்தைத்தோண்டிப்பார்ப்போம்” என்றான் முட்டாள்.
“ஆமாம்அதுதான் நல்லதுபகலில் தோண்டினால் ஊர் பூராவும் தெரிந்து விடும்அப்புறம்எல்லோரும் பங்கு கேட்பார்களே!” என்றான் மடையன்.
“மடையன் சொல்வதும் சரிதான்வாருங்கள், எல்லோரும் போய் இப்போதேதோண்டுவோம்!” என்று தோட்டத்துக்குப் போனார்கள்.
வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையைப் பிடித்துக் கொண்டுநின்றான், முட்டாள்.
யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்து விட்டு, தம்முடைய கைத்தடியால் ஓர் இடத்தில்வட்டமாகக் கோடு போட்டார், பரமார்த்தர்உடனே மட்டியும் மடையனும் வேகம் வேகமாகஅந்த இடத்தைக் கையால் பரக் பரக் என்று தோண்ட ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரம் ஆனதும், “கை எல்லாம் வலிக்கிறதே!” என்று மூச்சு வாங்க உட்கார்ந்துவிட்டனர்.
“குருவேபுதையலை விடக்கூடாது!” என்றபடி மூடனும், மண்டுவும் தொடர்ந்து பள்ளம்பறித்தார்கள்.
நான்கு பேரும் மாறி மாறி தோண்டிக் கொண்டே இருந்தபோது, திடீரென்று வெள்ளையாகஏதோ ஒன்று தட்டுப்பட்டது.
“ஆபுதையல்புதையல்!” என்று குதித்தபடி இன்னும் வேகமாகத் தோண்டினான், மட்டி.
உடனே பரமார்த்தர் குழிக்குள் கையை விட்டுப் பார்த்தார்உருண்டையாக ஏதோ ஒன்றுகிடைத்தது.
எல்லோரும் ஆசையோடு அதை வெளிச்சத்தில் காட்டிப் பார்த்தார்கள்.
பரமார்த்தரின் கையில் இருந்தது ஒரு மண்டை ஓடு!
அவ்வளவுதான்! “ஐயோஐயோ!” என்று அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தடித்துஓடினார்கள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !