Wednesday, December 19, 2018

நன்றி மறப்பது நன்றன்று

காசிராஐனின் தேசம் அங்குள்ள ஒரு வனத்தில் வேடன் ஒருவன் விஷம் தோய்ந்த அம்பினை ஒரு மானின் மீது எய்தினான்.அது குறி தவறி ஒரு பெரிய மரத்தின் மேல் பாய்ந்து பதிந்தது. விஷ அம்பு பாய்ந்ததால் மரத்தின் 
இலை, காய், கனி அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் தொடங்கின. அதில் வசித்த பறவைகள் திசைக்கொன்றாய் பறக்கவும் தொடங்கின. ஆனால் அதில் வசித்து வந்த ஒரு கிளி மட்டும் எங்கும் செல்லாமல் அந்த மரத்திலேயே தங்கி விட்டது. 
அந்த கிளியை பார்த்து வியப்படைந்த இந்திரன் மனித வடிவம் தாங்கி மரத்தின் பக்கத்தில் வந்தான். அந்த கிளியை பார்த்து பட்டுப் போன மரத்தை விட்டு பிரியாமல் அதன் கிளையிலேயே அமர்ந்து இருக்கிறாயே இந்த மரத்தால் என்ன பயன் .மரம்தான் கருகி விட்டதே என வினவினான். 
இந்த மரத்தில்தான் நான் பிறந்தேன்.இந்த கிளையில்தான் நான் வளர்ந்தேன்.இதில் பழுத்த பழங்களைதான் உண்டு உயிர் வாழ்ந்தேன்.எனக்கு அடைக்கலம் தந்த மரம் இன்று பட்டுப் போனதால் இதை விட்டுப் பிரிவதில் என்ன நியாயம் என்று சொன்னது கிளி... 
நன்றியும் விசுவாசமும் நிறைந்த கிளியின் வார்த்தைகளில் நெஞ்சம் நெகிழ்ந்தான் தேவேந்திரன்.உடனே இந்திரன் கிளியிடம் நீ விரும்பும் ஒரு வரம் கேள் தருகிறேன் எனறான். 
உடனே பட்டுப் போன இந்த மரம் பசுமை பெற வேண்டும் இதுதான் எனது விருப்பம் என்றது.இந்திரன் அளித்த வரத்தால் இலையும் கனியுமாக புத்துயிர் பெற்றது மரம்.இந்த கதை உணர்த்தும் கருத்து முதுமை அடைந்த பெற்றோரால் இனி எந்த பயனும் இல்லை என பெற்ற பிள்ளைகள் கருதி அவர்களை புறக்கணிக்கலாகாது.வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்றும் பெற்றவர்கள் வைரம் பாய்ந்த மரத்தை போன்றவர்களே.....

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !