Monday, December 10, 2018

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை பாகம் 1

Image result for lion fox and donkey story
பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம் அதை சுதரிசனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்து செங்கோலாட்சி புரிபவனாகவும் விளங்கினான். ஆனால்...

அவனுக்கு பிறந்த பிள்ளைகள் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாகவும் மூடர்களாகவும் இருந்தார்கள்.

இப்படி இருந்தால் எப்படி? நமக்கு பின் இந்த ராஜ்ஜியத்தின் கதி என்ன? என்ற கவலை அரசனைப் பிடித்துக் கொண்டது.

கல்வியும் தர்மகுணமும் இல்லாத பிள்ளைகள் இருந்தாவதென்ன?

'பால் கெடாத எருமைகளைக் காப்பாற்றினால் அவைகளால் பலனுண்டா?'

பிள்ளை என்று பிறந்தால் இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு அவர்கள் என்ன தவம் செய்தார்களோ என்றெல்லவா பிறர் போற்றும்படி இருக்க வேண்டும். நமக்கோ சுதிகேட்ட இசைபோல் மதிகெட்ட பிள்ளைகள் பிறந்திருக்கிறார்களே.
- என்றெல்லாம் அவன் மனம் வருந்து பெருமூச்சி விட்டது.

பலமுறை யோசித்த அரசன் அரச சபையைக் கூட்டி பல சான்றோர்களையும் வரவழைத்தான். அவர்களிடயே 'எண்ணிக்கைக்குப் பலவாகப் பிறந்துள்ள என் பிள்ளைகள் அறிவிலிகளாக இருக்கிறார்கள். இந்த ராஜ்ஜியத்தின் எதிகாலத்துக்குரியவர்களாகிய அவர்களை இங்கே வந்திருக்கும் உங்களில் யாராவது நீதிசாஸ்திர உபதேசத்தால் மறுபிறவி பெற்ற அறிவாளிகளாக்க முடியுமா?' என்று மனம் வருந்திய நிலையில் கேட்டான்.

வந்திருந்த சான்றோர்களில் நீதிசாஸ்திரம் மட்டுமின்றி சகல சாஸ்திரத்திலும் வல்லவராக இருந்த சோமசன்மா என்பவர் எழுந்தார்.

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை பாகம் 2

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !