Thursday, December 27, 2018

காதலர்களுக்குச் சமர்ப்பணம்

" மச்சான் போனை எடு. 
மச்சான் போனை எடு. 
மச்சான் போனை எடு. டேய்! சோம்பேறி போனை எடுடா. ", என்று கதரேசனின் போன் அதிகாலையிலே ஒலித்துக் கொண்டிருந்தது. 

போனை எடுத்து பார்க்க ஒலிப்பது நின்றது. 
கார்த்திகா தான் கால் பண்ணியிருக்கிறாள் என்பதை தவறிய அழைப்பு வரலாற்றைப் பார்த்து தெரிந்து கொண்டான். 

" 15 மிஸ்டுக்காலா? நான் இன்னைக்கு தொலைஞ்சேன். ",என்றவாறு தாமதமின்றி கார்த்திகாவிற்கு கால் செய்தான். 

அழைப்பை ஏற்ற கார்த்திகா, வழக்கம் போல, " டேய்! தடிமாடு! எத்துன தடவை கூப்பிடுறது! வேலைக்கு போகாமல் வீட்டுலதான சுத்திட்டு இருக்க! 
போன் பண்ணால் அதை எடுக்கதை விட அப்படி என்ன வேலை உனக்கு? ",என்றாள். 

" காலங்காலத்தால சேவல் தான்டி கூவும்! 
கோழி நீ கூவுவனு நான் எதிர்ப்பார்க்கலடி! 
அசந்து தூங்கிட்டேன்டி. 
சாரிடி. நைட் கொஞ்சம் லேட்டாத்தான் படுத்தேன். ",என்றான் கதிரேசன். 

" நைட் அப்படி என்னடா வெட்டி முறிச்ச? வெட்டியா உன் ப்ரண்ட்ஸோட ஊர் சுத்தியிருப்பா. ", என்றாள் கார்த்திகா. 

" அதெல்லாம் விடு! இப்போ என்ன விடயமா கால் பண்ணியிருக்க? " 

" ஆமா! இவரு பெரிய கலெக்டரு. விடயத்தோடத் தான் கால் பண்ணுவாங்க. " 

" விடயமில்லாம நீ கூவ மாட்ட. என்னனு சொல்லு. " 

" அது ஒன்னுமில்லடா. சின்ன விடயம் தான். இன்னைக்கு என்னை பொன்னு பார்க்க வாராங்கடா. " 

" அப்படியா! ரொம்ப சந்தோஷம்! பத்திரிக்கை மறக்காமல் கொடுத்துவல! சரி மாப்பிள்ளை என்ன பண்றானாம்? 
உங்க அப்பன் எதிர்பார்க்கிறதெல்லாம் இருக்கிறதா? " 
என்றான் கதிரேசன் நக்கலாக. 

" என்னடா! அப்படி தப்பிச்சிரலாம்னு பார்க்கிறீயா? 
உன்னையும் கொன்னுட்டு நானும் செத்துப் போவேன்டா. " 

" ஹேய்! லூசு மாதிரி பிணத்தாதடி. இப்போ என்ன செய்யனும்னு சொல்லு. " 

" நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும். எங்க அப்பாகிட்ட வந்து பேசுடா! ப்ளீஸ்! " 

" ஆமா! உங்க அப்பன் சரியான சிடுமூஞ்சியாச்சே! 
ஒப்புதல் தராவிட்டால் என்ன செய்யலாம்? " 

" அதை அப்புறம் சொல்லுறேன். நீ வந்து பேசு. " 

" ம்ம், சரி. ",என்றான். 

தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

ஏதோ தைரியத்தில் கார்த்திகாவிடம் சரியென்று சொல்லிட்டானே தவிர அவளுடைய தந்தையைக் காண பயமாக இருந்தது. 

சிறிது யோசித்தவன் கிளம்பினான் பயம் நீங்கியவனாக. 

அரிவாளை எடுத்து தான் சட்டைக்கு பின் பக்கமாக இட்டு மறைத்துக் கொண்டான். 

நேராக கார்த்திகா வீடு சென்றான். 
வீடு சற்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

கதிரேசன் உள்ளே சென்றான். 

கதிரேசனைக் கண்ட கார்த்திகாவின் தந்தை, " வாப்பா! நீ அப்பவே வருவேன்னு எதிர்ப்பார்த்தேன். 
இப்போதான் வார! . சரி உள்ளே வா. ",என்று தனியே அழைத்துச் சென்றவர், " என் பொண்ணு சொன்னா உன்னை காதலிக்கிறதாக. அது அவளோட விருப்பம். 
என் விருப்பம்னு ஒன்னு இருக்குதுல. அதான் என் நண்பரோட பையன். 
அவன் உன்னை மாதிரி இல்லப்பா. பெரிய கம்பேனியோட முதலாளி. ",என்று கூறி கதிரேசனின் கர்வத்தை தாக்கி அவனது வசதியின்மை இழிவுப்படுத்தியும் பேசினார். 

அவர் பேச பேச அமைதியாக கேட்டுக் கொண்டே இருந்தவனை, " சரி, வந்ததுதான் வந்துட்ட. அப்படி ஓரமா உக்கார்ந்து சாப்பிட்டு போ. ",என்றார் கார்த்திகாவின் தந்தை இருளப்பர். 

அதற்கு, கதிரேசன், " உங்க முடிவை நீங்க சொல்லிட்டீங்க. எங்க முடிவுனு ஒன்னு இருக்கிறதுலா. அதையும் பாருங்க. ", என்றவன், " கார்த்திகா! அடியேய் கார்த்திகா! ", என்று விளித்திட விரைந்தோடி வந்தாள். 

" உனக்கு நான் முக்கியமா? அல்லது உங்க அப்பா முக்கியமா? " 

" இரண்டு பேருமே முக்கியம் தான். " 

" இரண்டில் ஒன்றை சொல்லு. இரண்டையுமே சொல்லாத. ", என்றவன் குரலில் சற்று கடுமை தெரிந்தது. 

" நீ தான் ",என்றாள். 

" இந்தா! இந்த உடையை அணிந்து கொண்டு நீ போட்டு இருப்பதை கழற்றி வைத்துவிட்டு வா. ", என்று தான் வாங்கி வைத்திருந்த ஆடையை அளித்தான். 

வாங்கிக் கொண்டு உள்ளே சென்றவள் உடை மாற்றி வந்தாள். 
அதற்குள் எல்லாம் கூடி விட்டார்கள். 

கார்த்திகாவின் கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வர, 
நான்கு பேர் சூழ்ந்தார்கள். 
கதிரேசன் அரிவாளை எடுத்து கையில் வைத்துக் கொண்டு தயாரானான். 
அதைக் கண்டு சூழ்ந்தவர்கள் விலகிக் கொண்டார்கள். 
அவர்களுக்கு அவனைப் பற்றி தெரியும், கொலை செய்யவும் அஞ்சமாட்டான் என்று. 

நேராக அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்துவிட்டான். 
கதிரேசனின் நண்பர்கள் மறுநாள் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்தனர். 
அதன் படி திருமணமும் நடந்து முடிந்தது. 

கதிரேசன் தன் நண்பர்கள் உதவியுடன் சிறு தொழிலைத் தொடங்கினான். 
அதில் நல்ல வருமானம் வர பெரிய வீட்டைக் கட்டி அதில் கூடியேறினார்கள். 

அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திட ஆனந்தமாக வாழத் தொடங்கினார்கள். 

இப்படியாக நாட்கள் நகர, ஆண்டுகள் பல ஓடிக் கழிந்தது. இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று 
குடும்பம் பெரியதாக நரைத்த தலையோடு கார்த்திகாவும், நரை மீசையோடு கதிரேசனும் அதே காதலோடு வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். 
மூத்த மகன் திருமணம் செய்து பட்டிணத்தில் கூடியேறிவிட்டான். 
மகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். 

ஒரு நாள் அந்த ஊரில் கனமழை பெய்து வெள்ளம் வந்தது. 
கதிரேசனின் இளைய மகன் மகேஷ் வெளியூரில் படித்துக் கொண்டிருந்தான். 
அதனால் கதிரேசன் தன் மனைவியுடன் தனியாக இருந்தார். 
அங்கு வந்த பெரும் வெள்ளத்தில் இருவரும் சிக்கி இறைவனடி சேர்ந்தார்கள். 
அவர் வாழந்த வீட்டிலேயே இறந்ததால் அங்கேயே புதைக்கப்படு சமாதி எழுப்பினார்கள். 
ஒரு காதலின் நினைவு சின்னமாக அது மாறிவிட்டது. 

ஒருவர் மேல் ஒருவர் எடுத்துக் கொள்ளும் உரிமை, அதில் அவர்கள் கொண்ட உறுதி எதையும் சந்திக்கும் தைரியம் தரும். 
காதலர்களே உறுதியோடு இறுதி வரை வாழுங்கள். 
உங்களுக்காக இச்சிறுகதையைச் சமர்பிக்கிறேன்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !