Monday, December 10, 2018

காவல்காரர்கள் பெற்ற பரிசு


Image result for akbar cartoon


ஒருநாள்சக்கரவர்த்தி அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில்அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான்அவன் அக்பரை பணிவுடன் வணங்கியபோதுஅக்பர் அவனை நோக்கி, “நீ யாரப்பாஉனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
பிரபுஎன் பெயர் மகேஷ்தாஸ்நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன்வேலை தேடி உங்களிடம் வந்தேன்!” என்றான் அவன்.
உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?” என்று அக்பர் கேட்டார்.
என் ஆசிரியர் சொன்னார்பிரபுஎன்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார்அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்” என்றான் மகேஷ்.
எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள்உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!” என்றார் அக்பர்.
பிரபுநீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்!” என்று மகேஷ் பெருமையுடன் கூறினான்.
அப்படியானால்அதை நிரூபித்துக் காட்டு!” என்றார் அக்பர்.
பிரபுஅதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா?” என்று மகேஷ் கேட்டான்.

முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டுபிறகு பரிசைப் பற்றிப் பேசு!” என்றார் அக்பர்.
நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது!” என்றான் மகேஷ்.

அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு?” என்றார் அக்பர்.
முப்பது சவுக்கடி கொடுங்கள்!” என்றான் மகேஷ்அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.

உனக்கென்ன பைத்தியமா?” என்று அக்பர் கோபத்துடன் கேட்டார்.
அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்!” என்றான் மகேஷ்.
உடனேஅக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார்பின்னர் அவன் செவிகளில் “அவனை அடித்து விடாதேஅடிப்பது போல் பாவனை செய்!” என்றார்.

மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை “நீ அடிக்கத் தொடங்கு!” என்றான்அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான்பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும்மகேஷ் “நிறுத்து!” என்று கூவினான்பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, “பிரபுபரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டதுமீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!” என்றான்.
அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், “என்ன உளறுகிறாய்?” என்று கோபத்துடன் கேட்டார்.
அவர்களையே் கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றான்உடனேஅக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார்அவர்கள் வந்ததும்மகேஷ் அவர்களை நோக்கி, “தோழர்களேசக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவாஎன்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன்இனிநீங்கள் பெறுங்கள்” என்றான்.
 இரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்கஇருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டைஅடி விழுந்ததுவலி பொறுக்க முடியாமல் இருவரும் கதறஅக்பர் அவர்களை நோக்கி, “இந்த நிமிடமேஉங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!” என்று உத்தரவிட்ட பிறகுமகேஷிடம், “நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டிஉன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்” என்றார்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !