மரம் வளர்ப்போம் கட்டுரை

 

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மரங்களின் முக்கியத்துவம்
  3. மரங்களை அழிக்கும் மனிதனின் மடமைத்தனம்
  4. மரங்களின் அழிவும் மனிதவாழ்க்கையின் சவாலும்
  5. மரம் நடுதல் தொடர்பான முயற்சிகள்
  6. முடிவுரை

முன்னுரை

“வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்” அந்தளவிற்கு மரங்கள் மனிதர்களுக்கு நன்மையையே செய்கின்றன.

ஆனால் மனிதனோ அதை உணர்ந்தபாடில்லை இன்றைக்கு பூமிக்கு ஒட்சிசனை கொடையாக தரும் மரங்களை அழித்து விட்டு செயற்கையாக ஒட்சிசன் தேடி அலைகிறான்.

காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனை வெளிவிடும் உலகின் நுரையீரல் காடுகள் என்பதனை மனிதர்களில் சிலர் இன்னமும் உணரவில்லை.

இக்கட்டுரையில் மரங்களின் முக்கியத்துவம், மரங்களை அழிக்கும் மனிதனின் முட்டாள்தனம், மரங்களின் அழிவும் மனிதவாழ்க்கையின் சவாலும், மரம்நடுதல் தொடர்பான முயற்சிகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

மரங்களின் முக்கியத்துவம்

ஏனைய கோள்கள் எதிலும் இல்லாத தனி சிறப்பே பூமியில் நீர் இருப்பதும் மழை பொழிவதும் தாவரங்கள் வளரக்கூடிய சூழ்நிலை இருப்பது தான். மரங்கள் பூமிக்கும் மனிதர்களுக்கும் பல நன்மைகளை கொடுக்கின்றன.

மரங்கள் வளிமண்டலத்திற்கு நீரை அனுப்பி மழையை பொழிவிக்கின்றன. அத்துடன் வேகமான காற்று மோசமான சூரிய கதிர்வீச்சு போன்றனவற்றை உறிஞ்சி மனிதர்களை பாதுகாக்கின்றன. மனிதர்கள் இழைப்பாற நிழல் கொடுக்கின்றன.

பூகோளவெப்பமயமாதல் போன்ற நிலமைகள் உருவாக மரங்கள் அழிவடைவது தான் காரணமாகும்.

மரங்கள் சுவாசிக்க காற்று தருகின்றன. பொழிகின்ற மழையை தேக்கி வைக்கின்றன. மண்ணுக்கு பசும் போர்வையாக இருக்கின்றன. உண்பதற்கு காய்கனிகளை கிழங்கு தானியங்களையும் தருகின்றன.

அழகான பூக்களை தந்து இப்பூமியை அழகாக்கின்றன. மன அழுத்தம் நிறைந்த இவ்வாழ்க்கையில் பலபேரின் மன அமைதிக்கு இவ்வியற்கையே காரணாகும்.

காய்ந்து விறகாக எரிபொருளாகவும் மருந்து மூலிகைகளாகவும் வாழ்விடங்களை அமைக்க மரங்களாகவும் உதவுகின்றன.

மனிதர்கள் மாத்திரம் அன்றி பலகோடி பூச்சிகளும் ஊர்வனவும் பாலூட்டி விலங்குகளும் பறவைகளும் வாழ்விடம் கொடுத்து உணவளிக்கும் பூமியின் மிகப்பெரும் உயிர்ப்பெருந்திணிவு காடுகளாகும்.

இவ்வாறு மரங்களின் முக்கியத்துவம் எண்ணற்றவையாகும்.

மரங்களை அழிக்கும் மனிதனின் முட்டாள்தனம்

இன்றைய காலத்தில் மனிதன் மரங்களின் முக்கியத்துவத்தினை அறியாது அவற்றினை அபிவிருத்தி நடவடிக்கை எனும் பெயரில் அழித்து வருகின்றமையானது ஒரு இழி செயலாகும்.

இச்செயல்ப்பாடு அதிகம் அபிவருத்தியடையந்து வரும் நாடுகளில் உயர்வாக காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் மரங்களின் முக்கியம் அறிந்து அதனை அழிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி மரங்களை பாதுகாத்து வருகிறது.

மரங்களின் முக்கியத்துவம்

ஏனைய கோள்கள் எதிலும் இல்லாத தனி சிறப்பே பூமியில் நீர் இருப்பதும் மழை பொழிவதும் தாவரங்கள் வளரக்கூடிய சூழ்நிலை இருப்பது தான். மரங்கள் பூமிக்கும் மனிதர்களுக்கும் பல நன்மைகளை கொடுக்கின்றன.

மரங்கள் வளிமண்டலத்திற்கு நீரை அனுப்பி மழையை பொழிவிக்கின்றன. அத்துடன் வேகமான காற்று மோசமான சூரிய கதிர்வீச்சு போன்றனவற்றை உறிஞ்சி மனிதர்களை பாதுகாக்கின்றன. மனிதர்கள் இழைப்பாற நிழல் கொடுக்கின்றன.

பூகோளவெப்பமயமாதல் போன்ற நிலமைகள் உருவாக மரங்கள் அழிவடைவது தான் காரணமாகும்.

மரங்கள் சுவாசிக்க காற்று தருகின்றன. பொழிகின்ற மழையை தேக்கி வைக்கின்றன. மண்ணுக்கு பசும் போர்வையாக இருக்கின்றன. உண்பதற்கு காய்கனிகளை கிழங்கு தானியங்களையும் தருகின்றன.

அழகான பூக்களை தந்து இப்பூமியை அழகாக்கின்றன. மன அழுத்தம் நிறைந்த இவ்வாழ்க்கையில் பலபேரின் மன அமைதிக்கு இவ்வியற்கையே காரணாகும்.

காய்ந்து விறகாக எரிபொருளாகவும் மருந்து மூலிகைகளாகவும் வாழ்விடங்களை அமைக்க மரங்களாகவும் உதவுகின்றன.

மனிதர்கள் மாத்திரம் அன்றி பலகோடி பூச்சிகளும் ஊர்வனவும் பாலூட்டி விலங்குகளும் பறவைகளும் வாழ்விடம் கொடுத்து உணவளிக்கும் பூமியின் மிகப்பெரும் உயிர்ப்பெருந்திணிவு காடுகளாகும்.

இவ்வாறு மரங்களின் முக்கியத்துவம் எண்ணற்றவையாகும்.

மரங்களை அழிக்கும் மனிதனின் முட்டாள்தனம்

இன்றைய காலத்தில் மனிதன் மரங்களின் முக்கியத்துவத்தினை அறியாது அவற்றினை அபிவிருத்தி நடவடிக்கை எனும் பெயரில் அழித்து வருகின்றமையானது ஒரு இழி செயலாகும்.

இச்செயல்ப்பாடு அதிகம் அபிவருத்தியடையந்து வரும் நாடுகளில் உயர்வாக காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் மரங்களின் முக்கியம் அறிந்து அதனை அழிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி மரங்களை பாதுகாத்து வருகிறது.

இன்னும் மடைமை மிகுந்த சிலருக்கு மரங்களின் அருமை புரியவேயில்லை.

மரம் நடுதல் தொடர்பான முயற்சிகள்

மரங்களே எம் மண்ணின் வரங்கள் இவற்றை எம் மூதாதையர்கள் உணர்ந்திருந்தனர். அவர்கள் பாதுகாத்த மரங்கள் தான் இன்று எமக்கு நிழலாகி பயன் தந்து கொண்டிருக்கிறது.

நாமும் மரங்கள் நடவேண்டும் அண்மையில் காலமான தென்னிந்திய திரைப்பட நடிகர் திரு விவேக் அவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் நினைவாக ஒரு கோடி மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்தை அமுல்படுத்திய மகத்தான பணியை ஆற்றி சென்றார்.

அவர் விட்டு சென்ற பணியை நாம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டும். இன்றைக்கு உருவாகும் நகரங்கள் அதிகம் பசுமை நகரங்களாகவே உருவாக்கப்பட்டுவருவது சிறப்பான ஒன்றாகும்.

முடிவுரை

சராசரியாக ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை என்று கணித்திருக்கிறார்கள். உலகமக்கள் சனத்தொகையிலும் அதிகமாக மரங்கள் இப்பூமியில் காணப்படவேண்டும் ஒரு நாட்டில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும்.

காடுகளை நாம் செயற்கையாக உருவாக்க வேண்டிய சூழலை இங்கு உருவாக்கியது யார்? நாம் தான்.

இயற்கையாக உருவாகியவை தான் இந்த பெரும் விருட்சங்கள் நிறைந்த இக்காடுகள் இவற்றை அழிப்பதை நிறுத்தி பாதுகாப்போம்.

எல்லா வளங்களையும் அழித்து நாமும் அழிந்து எமது வருங்கால சந்ததியினரின் அழிவுக்கு நாமே வித்திடாமல் மரங்களை காப்போம் எம் வாழ்வை காப்போம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !